இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று 2024 ஆம் நிதியாண்டுக்கான கடைசி மற்றும் 2024 ஆம் ஆண்டின் முதல் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார். சந்தை கணிப்புகளைப் போலவே 6வது முறையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ரெப்போ விகிதம் 6.5 சதவீதம் அளவீட்டில் அடுத்த 2 மாதங்களுக்குத் தொடரும் எனச் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் தடாலடியாக 700 புள்ளிகள் வரையில் சரிந்தது, இது மட்டும் அல்லாமல் பல வங்கிகள் தனது வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளதால் சாமானிய மக்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரையில் அதிர்ச்சியில் உள்ளனர்.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து உயர்வுடன் இருந்த வேளையில் ஆர்பிஐ முடிவுகள் வெளியான அடுத்த சில நொடியில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பால் பத்திர சந்தைக்கு மிகவும் சாதகமாகச் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஆர்பிஐ நாணய கொள்கை மூலம் சாதகமான சூழ்நிலை உருவாகும் எனக் கணிக்கப்பட்டது.
ஆனால் 6வது முறையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ரெப்போ விகிதம் 6.5 சதவீதம் அளவீட்டில் அடுத்த 2 மாதங்களுக்குத் தொடரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் துறைவாரியான குறியீட்டில் வங்கி, ஆட்டோமொபைல், நிதியியல் சேவைகள், எப்எம்சிஜி ஆகிய 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் ஆர்பிஐ வங்கி கடனிலும் புதிய மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது, இதன் வாயிலாகவே இந்தச் சரிவு பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 72,473.42 புள்ளிகளில் துவக்கிய வேளையில் ஆர்பிஐ முடிவுக்கு முன்பு 72,473.42 புள்ளிகள் என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆனால் 10.15-க்கு ஆர்பிஐ நாணய கொள்கை முடிவுகள் வெளியானது மூலம் 71,405.38 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
தற்போது சென்செக்ஸ் குறியீடு 523.01 புள்ளிகள் சரிந்து 71,628.18 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பவர்கிரிட், எஸ்பிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகியவை மட்டும் உயர்வுடன் உள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 22,009.65 புள்ளிகளுக்குத் துவங்கி, 21,709.55 புள்ளிகள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. தற்போது 164.30 புள்ளிகள் குறைந்து 21,766.20 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications