இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி மற்றும் நாட்டின் முன்னணி வங்கி சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டாலும், சிறப்பாக இயங்கும் இரு நிறுவனங்கள் எதற்காக இணைக்கப்படுகிறது. என்ற கேள்வி தொடர்ந்து இருந்துகொண்ட வந்தது..
இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது..
ரிசர்வ் வங்கி
இந்திய வங்கிகளைக் கடுமையான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் கீழ் கண்காணித்து வரும் ஆர்பிஐ பெரிய வங்கிகளையும் விடுவது இல்லை. NBFC முதல் பெரிய பொதுத்துறை வங்கிகள் வரையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், விதிமுறை மீறல்களை ஆர்பிஐ சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெச்டிஎப்சி - ஹெச்டிஎப்சி வங்கி
இந்த வரிசையில் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிக்கு மத்தியில் வீட்டுக் கடன் உருவாவது மற்றும் இரு தரப்புக்கு மத்தியில் நடக்கும் வர்த்தக, நிதி பரிமாற்றம் ஆகியவற்றைக் குறித்து ரிசர்வ் வங்கி கேள்வி எழுப்பியது.
ஆர்பிஐ கேள்வி
ஆர்பிஐ கேள்வியும் அதைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளைப் பூதாகரமாக வெடிப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக கட்டமைப்பு
ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி மத்தியில் இருக்கும் ஒப்பந்தம் என்பது இத்துறைக்கு நல்லது இல்லை என்றும், இந்நிறுவன வர்த்தக கட்டமைப்புக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தான் ரிசர்வ் வங்கி கேள்வி எழுப்பியது எனத் தெரிகிறது.
ஒப்பந்தம்
ஹெச்டிஎப்சி வங்கி 1.10% கட்டணத்தில் ஹெச்டிஎப்சி-க்கு வீட்டுக் கடன் வர்த்தகத்தைப் பெற்றுத் தருகிறது. இதேபோல் ஒரு வருடத்திற்குப் பின்பு அதே வீட்டுக்கடனில் 70 சதவீதத்தை ஹெச்டிஎப்சி-யிடம் இருந்து ஹெச்டிஎப்சி வங்கி வாங்குகிறது. இதற்காக 0.75 சதவீத வட்டி வருமானத்தை ஹெச்டிஎப்சி-க்கு செலுத்துகிறது.
இண்டஸ்இந்த் வங்கி, ஆர்பிஎல் வங்கி
இதேபோன்ற முறையைப் பல வங்கிகள் தனது தாய் நிறுவனத்திடம் இருந்து பெறுகிறது, உதாரணமாக இண்டஸ்இந்த் வங்கி, ஆர்பிஎல் வங்கி செய்கிறது, ஆனால் எந்த வங்கியும் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்படியான அளவை ஹெச்டிஎப்சி கூட்டணி போல் கைப்பற்றுவது இல்லை.
Recommended Video
நீண்ட கால அடிப்படையில் பாதிப்பு
இந்தக் கட்டமைப்பு நீண்ட கால அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஆர்பிஐ கேள்வி, இதனாலேயே பிரச்சனை பெரிதாக வெடிக்கும் முன்பு ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கியை இணைக்க நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications