டெல்லி: பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியானது கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 2,617 கோடி ரூபாய் வாராக்கடனை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், 2019ம் நிதியாண்டில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 2,617 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளாதாக தெரிவித்துள்ளது.

இதே ரிசர்வ வங்கியால் மதிப்பிடப்பட்ட வாராக்கடன் விகிதமும், 2617 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் நிகர நஷ்டம் 2019ம் நிதியாண்டில் 11,335.90 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக இவ்வங்கி அறிவித்துள்ளது. இதே ரிசர்வ் வங்கி 9,975 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் மதிப்பானது 78,472.70 கோடி ரூபாய் என இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இதே ரிசர்வ் வங்கி 81,089.70 கோடி ரூபாய் வாராக்கடன் என மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த வங்கியின் நிகர வாரக்கடன் மதிப்பானது 30,037.66 கோடி ரூபாய் என இவ்வங்கி அறிவித்துள்ளது. எனினும் ரிசர்வ் வங்கி இதற்கு மாறாக 32,654.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே புரவீசன் 2019ம் நிதியாண்டில் 48,151.15 கோடி ரூபாயாக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இவ்வங்கி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 507 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது. எனினும் இதற்கு முந்தைய ஆண்டு இதே இராண்டாவது காலாண்டில் 4,532.35 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர வட்டி வருவாய் 7.2 சதவிகிதம் அதிகரித்து, 4,262 கோடி ரூபாயை அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,974 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மொத்த வாராக்கடன் மதிப்பு 16.76 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும், இதே ஜூன் காலாண்டில் 16.49 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. எனினும் முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 17.16 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.
இந்த வங்கியின் வாராக்கடன் விகிதம் முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைந்திருந்தாலும், ஒட்டுமொத்த விகிதமானது இன்னும் பெரிய அளவில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications