டிஜிட்டல் மோசடிகள் 708% உயர்வு.. ஷாக் கொடுக்கும் புகார் எண்ணிக்கை..!!

சென்னை: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் மோசடி புகார்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மோசடி புகார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 2023-24 நிதியாண்டில் வங்கிகளில் மொத்தம் 36,075 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. இது 2022-23 நிதியாண்டில் பதிவான 9,046 மோசடி புகார்களைக் காட்டிலும் கிட்டத்தட்ட 300% அதிகமாகும்.

டிஜிட்டல் மோசடிகள் 708% உயர்வு.. ஷாக் கொடுக்கும் புகார் எண்ணிக்கை..!!

மோசடி தொகையில் குறைவு: மோசடி புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், மொத்த மோசடி தொகை குறைந்துள்ளது. 2023-24 நிதிய ஆண்டில் மொத்தம் ரூ.13,930 கோடி மோசடி நடந்துள்ளது, இது 2022-23 நிதிய ஆண்டில் பதிவான ரூ.45,358 கோடியைக் காட்டிலும் 46.7% குறைவு.

இணைய மோசடிகள்: 2022 ஆம் நிதியாண்டில் கார்டு மற்றும் இண்டர்நெட் பேமெண்ட் பிரிவில் 3596 புகார்களில் 155 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி நடந்தது. இது 2024 ஆம் நிதியாண்டில் 29,082 புகார்களில் 1457 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி நடந்துள்ளது. இது கிட்டத்தட்ட 708% அதிகமாகும்.

மோசடி முறைகள்: ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில், எண்ணிக்கை அடிப்படையில் மோசடிகள் பெரும்பாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் (டெபிட் கார்டு, இணையதள பண பரிவர்த்தனை) நடந்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஆனால், மதிப்பு அடிப்படையில், கடன் வழங்கும் பிரிவிலேயே அதிக அளவில் மோசடிகள் நடந்துள்ளன.

தனியார் துறை vs பொது துறை வங்கிகள்: கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவிலான மோசடி புகார்கள் தனியார் துறை வங்கிகளில் பதிவாகியுள்ளன. என்றாலும், மோசடி தொகையில் பெரும்பங்கு வகிப்பது பொது துறை வங்கிகளே ஆகும்.

மோசடி முறைகளில் வேறுபாடு: ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், தனியார் துறை வங்கிகளில் பதிவாகியுள்ள மோசடிகளில் பெரும்பாலானவை குறைந்த தொகையுடைய டெபிட் கார்டு மற்றும் இணையதள மோசடிகளாகும். பொது துறை வங்கிகளில், கடன் வழங்கும் பிரிவிலேயே அதிக அளவிலான மோசடிகள் நடந்துள்ளன.

எண்ணிக்கை அதிகரிப்புக்கான காரணங்கள்: வங்கி மோசடி புகார்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு, மக்களிடையே குறைவான விழிப்புணர்வு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

எதிர்கால நடவடிக்கைகள்: வங்கி மோசடிகளைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வங்கிகளுக்கான கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் போன்றவை அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+