பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்.. புதிய உச்சத்தில் பவர் பைனான்ஸ், டிக்சன் பங்குகளின் விலை

நான்கு மாநில தேர்தல் முடிவுகள், சர்வதேச அளவில் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

இந்த சூழலில் பல நிறுவன பங்குகளின் விலை 52 வார கால புதிய உயர்வை எட்டியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் டிவி18, பவர் பைனான்ஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், ஆர்.இ.சி., வர்ரோக் இன்ஜினீயரிங் ஆகிய பங்குகளின் விலை 7 முதல் 11 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.

பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்.. புதிய உச்சத்தில் பவர் பைனான்ஸ், டிக்சன் பங்குகளின் விலை

இன்றும் இந்நிறுவன பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. டிவி18 நிறுவன பங்கினை தவிர்த்த மற்ற 4 நிறுவன பங்குகளின் விலையும் வர்த்தகத்தின் இடையே 52 வார கால புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

டிவி18 பிராட்காஸ்ட் (TV18 Broadcast Ltd):டிவி பிராட்காஸ்ட் துறையை சேர்ந்த நிறுவனம் டிவி18 பிராட்காஸ்ட். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 11.37 சதவீதம் உயர்ந்து ரூ.48.00ஆக இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சுமார் 2 சதவீதம் உயர்ந்து ரூ.49வரை சென்றது.

பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்: மத்திய அரசுக்கு சொந்தமான, நிதி சேவை துறையை சேர்ந்த நிறுவனம் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 9.03 சதவீதம் உயர்ந்து ரூ.365.15ஆக இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சுமார் 6 சதவீதம் உயர்ந்து ரூ.386.25 வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும்.

டிக்சன் டெக்னாலஜிஸ்: மின்னணு சாதனங்கள் தயாரிப்பு ஈடுபட்டு வரும் நிறுவனம் டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 8 சதவீதம் உயர்ந்து ரூ.5,951.65ஆக இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.6,186.15வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும். இருப்பினும் இப்பங்கின் விலை தற்சமயம் சிறிது குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

ஆர்.இ.சி.: மத்திய அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஆர்.இ.சி.. கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 7.26 சதவீதம் உயர்ந்து ரூ.374.00ஆக இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் ரூ.394.80 வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும்.

வர்ரோக் இன்ஜினீயரிங் லிமிடெட்: வாகன உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம் வர்ரோக் இன்ஜினீயரிங் லிமிடெட். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 6.31 சதவீதம் உயர்ந்து ரூ.571.60ல் முடிவுற்றது. இன்று காலையில் பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே சுமார் 3 சதவீதம் உயர்ந்து ரூ.588.30வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+