இந்திய பங்குச்சந்தையில் குறிப்பிட்ட நபர்கள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வது அல்லது அந்த நிறுவன பங்குகளை விற்பனை செய்துவிட்டு அதிலிருந்து வெளியேறுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அது ஒரு விவாத பொருளாக மாறும். அப்படிப்பட்ட ஒருவர் தான் ரேகா ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
இவர் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மூன்று நிறுவனங்களில் இருந்து தன்னுடைய பங்குகளை பகுதியளவு விற்பனை செய்துள்ளார். இதுதான் தற்போது பங்குச்சந்தை நிபுணர்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது.

கனரா வங்கியில் இவர் கிட்டதட்ட 3.75 கோடி ஈக்விட்டி பங்குகளை தன் வசம் வைத்திருந்தார். இதில் 1.12 கோடி பங்குகளை மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இவர் விற்பனை செய்துள்ளார்.
தற்போது இவர் வசம் இருக்கும் கனரா வங்கி பங்குகளின் எண்ணிக்கை 2.63 கோடி ஆகும். இதன் தற்போதைய மதிப்பு 1,615 கோடி ரூபாய் ஆகும். கனரா வங்கி பங்குகளின் மதிப்பு ஓராண்டில் 115% வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரேகா ஜுன்ஜுன்வாலா ராகவ் ப்ரொடக்டிவிட்டி என்ஹான்ஸ் என்ற நிறுவனத்தில், 11,74,252 ஈக்விட்டி பங்குகளை வைத்திருந்தார். இதன் மதிப்பு 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் அவர் 12,400 பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். தற்போது அவர் வசம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 11,61,852 ஆகும்.
ரேகா ஜுன்ஜுன்வாலா க்ரைசல் லிமிடெட் நிறுவனத்தில் தான் வைத்திருந்த பங்குகளிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை விற்பனை செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் அவர் 40 லட்சம் ஈக்விட்டி பங்குகளை வைத்திருந்தார். அதில் 20 ஆயிரம் பங்குகளை விற்பனை செய்து தற்போது 39 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 1,956.5 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த ஓராண்டில் க்ரைசல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 45% வளர்ச்சி அடைந்திருந்தது, நடப்பு ஆண்டில் 15% வளர்ச்சி அடைந்துள்ளது. ராகவ் ப்ரொடக்டிவிட்டி என்ஹான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டில் 45% வளர்ச்சியையும், 2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 15% சரிந்துள்ளது.
தற்போது ரேகா ஜுன்ஜுன்வாலாவின் பங்கு போர்ட்ஃபோலியோவை பொறுத்தவரை 26 நிறுவனங்களில் ரூ.51,912 கோடி மதிப்புள்ள பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications