மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், செயற்கைகோள் அடிப்படையிலான ஜிகாபிட் பிராட்பேண்ட் சேவையை வழங்கும் ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் (Space Fiber) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்குவதில் தீவிரமாக உள்ளது. ஜியோ நிறுவனம் தற்போது நாட்டில் எளிதில் சேவை வழங்க முடியாத பகுதிகளுக்கு அதாவது கிராமப்புற பகுதிகளுக்கு அல்லது மலைப்பாங்கான பகுதிகளுக்கு அதிவேக இன்டர்நெட்டை வழங்கும் நோக்கில் செயற்கைகோள் அடிப்படையிலான ஜிகாபிட் பிராட்பேண்ட் சேவையை வழங்கும் ஜியோ ஸ்பேஸ் பைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் தொழில்நுட்ப கருத்தரங்கான இந்திய மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் காங்கிரஸில் ரிலையன்ஸ் ஜியோ தனது இந்தியாவின் முதல் செயற்கைகோள் அடிப்படையிலான ஜிகாபைபர் இன்டர்நெட் சேவை உள்ளிட்ட தனது சாதனங்களை காட்சி படுத்தி இருந்தது.
பிரதமர் மோடி முன்னிலையில், ஜிகாபைபர் இன்டர்நெட் சேவையின் செயல்படும் விதத்தை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி செய்து காட்டினார்.
ஜிகாபைபர் இன்டர்நெட் சேவை வழங்குவதற்காக MEO செயற்கைகோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த SES நிறுவனத்துடன் வர்த்தக கூட்டு வைத்துள்ளது. விண்வெளியில் இருந்து தனித்துவமான ஜிகாபிட், ஃபைபர் போன்ற சேவைகளை வழங்கும் திறன் ஒரே செயற்கைகோள் தொழில்நுட்பம் MEO என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோவால் ES நிறுவனத்தின் O3b மற்றும் new O3b mPOWER செயற்கைக்கோள்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ விளங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் சேவை தற்போது, குஜரத்தின் கிர், சத்தீஸ்கரில் கோர்பா, ஒடிசாவின் நப்ராங்பூர் மற்றும் அசாமில் ஓ.என்.ஜி.சி.-ஜோர்ஹத் ஆகிய தொலைத்தூர இடங்களில் கிடைக்கிறது.
மிகவும் குறைந்த விலையில் நாடு முழுவதும் இந்த சேவை கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. ஜியோவின் ஸ்பேஸ் பைபர் சேவை போட்டி நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 450 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வேகமான பிராட்பேண்ட் மற்றும் வயர்லெஸ் இணையதள சேவை வழங்கி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications