டீல் ஓகே.. அம்பானி வளைத்து போட்ட புதிய நிறுவனம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலையெழுத்தை மொத்தமாக மாற்றக்கூடிய வர்த்தகப் பிரிவாக உருவெடுத்திருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும், தனது சொந்த தயாரிப்புகளை ரீடைல் விற்பனை சந்தைக்குக் கொண்டு வரவும் முக்கியமான வர்த்தகத் தளத்தைத் தேடி வந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் மெட்டோ ஏஜி தனது இந்திய வர்த்தகப் பிரிவை விற்பனை செய்ய முடிவு செய்தது.

இந்த வாய்ப்பை விடக் கூடாது என முடிவு செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடுமையான போட்டிக்கு மத்தியில் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பின்பு மெட்ரோ நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் வியாழக்கிழமை மெட்ரோ கேஷ் அண்ட் கேரி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 2850 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2850 கோடி ரூபாய் டீல்

2850 கோடி ரூபாய் டீல்

மெட்ரோ இந்தியா வர்த்தகத்தைக் கைப்பற்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பல போராடியது குறிப்பாக டிமார்ட், அதானி குழுமம் போன்றவை முயற்சி செய்தது, ஆனால் கடைசிக் கட்டத்தில் வெளியேறியது.

மெட்ரோ இந்தியா

மெட்ரோ இந்தியா

இந்த 2850 கோடி ரூபாய் ஒப்பந்தம் மூலம் மெட்ரோ இந்தியாவின் கடைகள், ஊழியர்கள், கட்டமைப்புகள் அனைத்தையும் மொத்தமாகப் பெற உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தைக் கைப்பற்றுவதைச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும், இதன் மூலம் மார்ச் 2023 க்குள் இந்த ஒப்புதல் பெற்று ரிலையன்ஸ் கட்டுப்பாட்டுக்கு வரும் எனக் கணிக்கப்படுகிறது.

மொத்த விற்பனை சந்தை

மொத்த விற்பனை சந்தை

இந்தியாவின் மொத்த விற்பனை சந்தையில் டிஸ்ட்ரிபியூட்டர்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த நிலையில் மெட்டோ சிறு மற்றும் நடுத்தரக் கடைக்காரர்களை இணைக்கும் ஒரு ஹோல்சேல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

புதிய பிராண்ட்

புதிய பிராண்ட்

ரிலையன்ஸ் ரீடைல் தற்போது Independence என்ற பிராண்டை உருவாக்கிய நிலையில் மெட்ரோ-வை கைப்பற்றியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் இந்தியா முழுவதும் சுமார் 16000 கடைகளை வைத்துள்ள நிலையில் மெட்ரோ வெறும் 31 கடைகளை மட்டுமே வைத்துள்ளது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் இது அனைத்தும் மொத்த விற்பனை கடைகள் என்பதால் அதிகப்படியான வர்த்தகத்தை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.

 60 லட்சம் கோடி ரூபாய்

60 லட்சம் கோடி ரூபாய்


இந்தியா சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை வர்த்தகத்தைக் கொண்டது என்பதால் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ஈஷா அம்பானி FMCG துறையில் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உடன் Independence என்ற புதிய பிராண்ட்-ஐ உருவாக்கியுள்ளது.

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

இந்தப் பிராண்ட் உடன் மக்களுக்குத் தினசரி தேவைப்படும் பொருட்கள் முதல் பிராசஸ் செய்யப்பட்ட உணவு பொருட்களைக் குறைவான விலையிலும், சிறந்த தரத்துடனும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+