70 வயது முதியவரையும் விட்டு வைக்கல.. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.10 கோடி அபேஸ்!

இந்தியாவில் சில காலமாக மோசடி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. வயதானவர்களையும் இந்த கும்பல் விட்டு வைப்பதில்லை. நாளுக்கு ஒரு மோசடி செய்தியாவது ஊடகங்களில் வெளி வருகிறது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஏமாறும் நபர்கள் லட்சக்கணக்கில் தான் தங்களுடைய பணத்தை இழக்கின்றனர். ஆள் பெயர் தெரியாத நபர்களிடம் அதிக அளவில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை.

அதேபோல இன்றும் ஒரு மோசடி சம்பவத்தைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம். டெல்லியைச் சேர்ந்த 70 வயதான ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பை இழந்திருக்கிறார்.

 70 வயது முதியவரையும் விட்டு வைக்கல.. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.10 கோடி அபேஸ்!

தைவானிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அடங்கிய பார்சல் 70 வயதான முதியவர் பெயரில் வந்திருப்பதாக கூறி மோசடிப் பேர்வழிகள் அவரை ஏமாற்றி இருக்கின்றனர். சட்ட அமலாக்க அதிகாரியாக காட்டிக் கொண்டு அந்த கும்பலில் இருந்த ஒருவர் முதியவரை வற்புறுத்தி பல்வேறு கணக்குகளுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையை அனுப்ப சொல்லியிருக்கிறார். ஆனால் மோசடியாக திருடப்பட்ட பணத்தில் ரூ.60 லட்சத்தை போலீசார் முடக்கி வைத்துள்ள நிலையில், மீதி பணத்தையும் மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

மோசடி எப்படி நடந்தது?: டெல்லியின் ரோகிணி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட முதியவருக்கு திடீரென ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பில் பாதிக்கப்பட்ட முதியவரிடம் அவருடைய பெயர் மற்றும் பிற அடையாள தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அப்போது முதியவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இருப்பதாகவும் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த முதியவர் அதன் பிறகு மோசடிக்காரர்கள் சொன்ன அனைத்து விஷயத்திற்கும் இணங்கியிருக்கிறார். ஒரு வேலை ஒத்துழைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து விடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். பீதியடைந்த முதியவர் சட்ட சிக்கலை தவிர்க்கும் பொருட்டு அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட முதியவரை கேமரா முன்பு மணி கணக்கில் இருக்க வைத்துள்ளனர். மேலும் யாரிடமும் நடந்த விஷயத்தை கூறக்கூடாது என்று சொல்லி ஒரு அறையில் தனிமையில் இருக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு அதிகமாக வீடியோ காலில் இருக்கச் சொல்லி இருக்கின்றனர். ஒருவேளை கேமராவை ஆப் செய்தாலோ அல்லது நகர்த்தினாலோ கைது செய்து விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். மேலும் அவரது முழு குடும்பத்தையும் கைது செய்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.

அதன் பிறகு மற்றொரு நபர் மும்பை போலீஸ் அதிகாரி போல திரையில் தோன்றியுள்ளார். அதோடு தான் சொல்வதைக் கேட்டால் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பதாகவும் முதியவரிடம் வாக்குறுதி அளித்துள்ளார். அவருடைய நம்பிக்கையை பெற்ற அந்த முதியவர் போலீஸ்காரராக மாறுவேடமிட்ட நபர் சொல்வதற்கு இணங்கியுள்ளார். அப்படித்தான் 8 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தனது சேமிப்புகளையும் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி இருக்கிறார்.

அவருடைய கணக்கை காலி செய்த பிறகு அவருடைய குழந்தைகள் பெயரில் இருக்கும் கணக்கில் இருந்த பணத்தையும் அனுப்ப சொல்லி இருக்கின்றனர். அதன் பிறகும் தொடர்ந்து பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அந்த முதியவர் நடந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடியின் அளவைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உடனடியாக மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.60 லட்சத்தை போலீசார் முடக்கியுள்ளனர். முடிந்தவரை பணத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+