சமீப காலமாக தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் தான் இப்படியென்றால், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வெள்ளியை வாங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தான், பிரபல நிதி ஆலோசகரும், 'ரிச் டாட் புவர் டாட்' நூலின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
78 வயதான கியோசாகி, தான் எழுதிய 'ரிச் டாட்'ஸ் பிராஃபெசி' என்ற புத்தகத்தில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதிச் சரிவு இறுதியாக இந்த ஆண்டே நிகழப் போகிறது என்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தச் சரிவு ஏற்படும்போது, ஓய்வூதிய மற்றும் சேமிப்புக் கணக்குகள் அனைத்தும் அழிக்கப்படலாம். இது பேபி பூமர்ஸ் தலைமுறையினரைத் தங்கள் ஓய்வுக்காலத் திட்டங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வைக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், காகித அடிப்படையிலான முதலீடுகளை கைவிட்டுவிட்டு, உண்மையான மற்றும் தொட்டு உணரக்கூடிய சொத்துக்களை நோக்கிச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அவரது பார்வையில், வெள்ளி மற்றும் எத்தேரியம் ஆகிய இரண்டும் இன்னும் குறைந்த மதிப்பில் இருப்பதோடு, உண்மையான தொழில்துறைப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளன.
மேலும், நிதிச் சரிவு ஏற்பட்டால் பேபி பூமர்ஸ் தலைமுறையினர் "வீடற்றவர்களாக மாறலாம் அல்லது தங்கள் குழந்தைகளுடன் வாழ நேரிடலாம்" என்றும் இது ஒரு சோகமான எதார்த்தம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபியட் கரன்சிகளை (அரசு வெளியிடும் பணத்தை) கடுமையாக விமர்சிப்பதில் பெயர் பெற்ற கியோசாகி, தனது வழக்கமான வாசகமான சேமிப்பாளர்கள் தோற்கிறார்கள் என்பதை மீண்டும் அவர் வலியுறுத்தினார். அவரது கருத்துப்படி, பணவீக்கம் மக்களின் சேமிப்பை குப்பை ஆக்கிவிடுகிறது என்று கூறுகிறார்.
கியோசாகி தனது செல்வத்தை தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்தேரியம் போன்ற கடின மற்றும் டிஜிட்டல் சொத்துக்களில் முதலீடு செய்யும்படி மக்களை வலியுறுத்தியுள்ளார். இவற்றில், வெள்ளி மற்றும் எத்தேரியம் ஆகியவை உடனடி லாபத்தை அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார். அச்சிடப்பட்ட சொத்துக்களைச் சேமிக்க வேண்டாம் என்று கேட்கும் அனைவருக்கும் நான் நினைவூட்டுகிறேன். உண்மையான சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஃபின்போல்ட் ஆய்வின்படி, கியோசாகி விரும்பும் சொத்துக்களான தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் ஆகியவை 2025 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 40% லாபம் ஈட்டியுள்ளது. இதில் வெள்ளி 47.5% உயர்ந்து (ஒரு அவுன்ஸ் 43.89 டாலர்) முதலிடத்தில் உள்ளது. தங்கம் 43.06%, பிட்காயின் 21.17% உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு மிகப்பெரிய சரிவு ஏற்படுகிறதோ இல்லையோ, அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

தங்கம் விலை தடாலடியாக ரூ.6000 உயர்வு.. MCX சந்தையில் நடப்பது என்ன..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications