இந்தியாவின் முக்கிய டார்கெட்டாக மாறியிருக்கும் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் குரூப் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்த மாபெரும் வெற்றி கூட்டணி இந்தியாவில் புதிய செமிகண்டக்டர் OSAT தொழிற்சாலையை அமைக்க உள்ளது, OSAT என்பது செமிகண்டக்டர் சிப்-ஐ அசம்பிளி மற்றும் டெஸ்டிங் சேவைகளை அளிக்கும் நிறுவனமாகும்.

ஹெச்சிஎல் நிறுவனம் மற்றும் தைவான் பாக்ஸ்கான் கூட்டணியில், 40 சதவீத பங்குகளைப் பாக்ஸ்கான் நிறுவனமும், 60 சதவீத பங்குகளை ஹெச்சிஎல் கொண்டு சுமார் 37.2 மில்லியன் டாலர் அதாவது 310 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த OSAT தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
OSAT துறையில் இறங்குவதை இரு நிறுவனங்களின் செய்தி தொடர்பாளர்களும் உறுதி செய்த நிலையில் ஹெச்சிஎல் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை காரணம் இந்தியாவில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது தான், ஆனால் வர்த்தகம் வாய்ப்புகள் காரணமாக மென்பொருள் சேவைத்துறைக்கு ஹெச்சிஎல் மாறியது.
ரேஷினி நாடார் தலைமையில் ஹெச்சிஎல் மீண்டும் தனது மென்பொருள் தயாரிப்பு அனுபவத்தையும், நெட்வொர்க்-ஐ தூசு தட்ட உள்ளது, மேலும் பாக்ஸ்கான் போன்ற முன்னணி உற்பத்தி நிறுவனத்தின் கூட்டணி செமிகண்டக்டர் போன்ற துறையில் ஹெச்சிஎல்-க்கு பெரும் பலமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் தைவான் பங்குச்சந்தையில் ஹெச்சிஎல் உடனான கூட்டணி குறித்த அறிவிப்பை பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப்-ன் கிளை நிறுவனமான Foxconn Hon Hai Technology India Mega Development Pvt. Ltd தெரிவித்தது.
ஒரு மென்பொருள் நிறுவனமாக ஹெச்சிஎல் நிறுவனத்திற்குச் செமிகண்டக்டர் டிசைன் மற்றும் டெஸ்டிங் சாப்ட்வேர் பிரிவில் நீண்ட கால அனுபவம் உள்ளது, இத்துறையில் பல சிப் தயாரிப்பாளர்களுடன் கூட்டணியும் உள்ளது. இந்த நிலையில் செமிகண்டக்டர் அசம்பிளிக்கும், உற்பத்திக்கும் பாக்ஸ்கான் போன்ற கூட்டணி இரு தரப்பு நிறுவனங்களுக்கும் பெரும் வாய்ப்பாக அமைய உள்ளது.
செமிகண்டக்டர் துறையில் பாக்ஸ்கான் இதற்கு முன்பு அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமத்துடன் 20 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் கூட்டணியை அமைத்தது. ஆனால் பல்வேறு காரணத்தால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டு, கூட்டணி முறித்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹெச்சிஎல் உடனான கூட்டணி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது, இந்தத் திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் அந்த 20 பில்லியன் டாலர் திட்டம் ஹெச்சிஎல் உடன் இணைந்து சாத்தியப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைவிட முக்கியமாக மத்திய அரசு செமிகண்டக்டர் துறையில் 10 பில்லியன் டாலர் மானிய திட்டம் அறிவித்து இந்திய கூட்டணியில் அமைக்கப்படும் முதல் திட்டம் ஹெச்சிஎல் - பாக்ஸ்கான் கூட்டணி நிறுவனத்துடையது.
இதற்கு முன்பு குஜராத்துக்கு வந்த அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம் சொந்த முதலீடாகும். இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சிக்குக் கூட்டணி வாயிலான முதலீடு பெரிய அளவில் பலன் அளிக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications