இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடம்.. யார் இந்த ரோஷ்னி நாடார்? அசர வைக்கும் சொத்து மதிப்பு..!!

ஹெச்சிஎல், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய அங்கமாக இருப்பதுடன், உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வகையில், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி என்ற பெருமையை இந்த ஆண்டு பெற்றுள்ளார். M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2025-இன் படி, இவர் தனது குடும்பத்துடன் இணைந்து ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியப் பணக்காரர்கள் தரவரிசையில், ஒரு பெண்மணி முதல் 3 இடங்களுக்குள் நுழைந்திருப்பது வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். 44 வயதான ரோஷ்னி நாடார், முதல் 10 இடங்களில் உள்ளவர்களில் மிகவும் இளையவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். தொழில்நுட்பம் சார்ந்த செல்வத்தின் மூலம் பல தலைமுறைகளின் அதிகாரத்தை குறிக்கும் வகையில், ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாக ஹுருன் பட்டியல் பாராட்டியுள்ளது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடம்.. யார் இந்த ரோஷ்னி நாடார்? அசர வைக்கும் சொத்து மதிப்பு..!!

தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பு : கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பட்டம் பெற்ற ரோஷ்னி மல்ஹோத்ரா, ஹெச்சிஎல் நிறுவனத்தை உலக அளவில் வலுப்படுத்தி, முன்னணி ஐடி சேவை நிறுவனமாக திகழ முக்கியக் காரணமாக இருந்துள்ளார். வணிகத்தை தாண்டி, சிவ் நாடார் அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் சமூக நலன்களில் அவர் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார்.

மேலும், "வணிகத்தில் உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக தொடர்ந்து இருக்கும் ரோஷ்னி, தொழில்நுட்பத் தலைமைத்துவத்தையும், சமூகப் பொறுப்பையும் ஒரு அரிய கலவையாக கொண்டுள்ளார். இது இந்தியத் தொழில்துறையில் அவரது முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று ஹுருன் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 கோடி பணம் சம்பாதிக்க எளிய வழி Mutual Fund - எளிய வழி

இந்த ஆண்டுப் பட்டியலில் 26 டாலர் பில்லியனர்கள் உட்பட மொத்தம் 101 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். நைக்கா நிறுவனத்தின் ஃபால்குனி நாயர் மற்றும் பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜும்தார்-ஷா போன்ற சொந்த முயற்சியில் சாதனை படைத்தப் பெண்மணிகளும் இதில் அடங்குவர். மல்ஹோத்ராவின் 3-வது ரேங்க் சாதனை, இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த செல்வத்தின் வளர்ச்சியை மட்டும் குறிக்கவில்லை. வணிகத் தலைமை மற்றும் செல்வத்தை உருவாக்குவதில் பெண்கள் இப்போது மையச் சக்திகளாக மாறிவிட்டனர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) நிறுவனம், இந்தியாவின் முன்னணிப் பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம், பொறியியல் சேவைகள், கிளவுட் கம்ப்யூட்டிங், இணையப் பாதுகாப்பு மற்றும் ஐடி உள்கட்டமைப்பு மேலாண்மை உள்ளிட்ட விரிவான தீர்வுகளை வழங்குவதில் ஹெச்சிஎல் கவனம் செலுத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+