ஏமாளிகள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், இந்தியாவில் MLM திட்டம் மூலம் மோசடி செய்த பல உதாரணங்கள் இருந்தாலும் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையாமல் தொடர்ந்து இத்தகைய MLM மோசடி திட்டம் மூலம் ஏமாந்து வருகின்றனர்.
இப்படி 1500 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ்
இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்களை (மக்களை) ஏமாற்றிய நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் ஆகியோரை அமலாக்கத்துறை நேற்று பெங்களூரில் இருந்து கைது செய்துள்ளது.
கச்சிபௌலி காவல் நிலையம்
தெலுங்கானாவில் கச்சிபௌலி காவல் நிலையத்தில் சைபராபாத் போலீஸார் இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் முதலீட்டாளர்களை மோசடி செய்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளது மார்ச் 2021ல் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக ஏற்கனவே 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 20 கோடி ரூபாய் பணம் கொண்ட வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
அமலாக்க துறை
இந்த வழக்கை அமலாக்கத் துறை கையில் எடுத்த நிலையில் தற்போது இந்நிறுவன உரிமையாளர்கள் அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்விருவரும் முறையற்ற வகையில் MLM திட்டம் மூலம் முதலீட்டாளர்களைச் சேர்த்து நேரடி விற்பனை பிரிவில் இறங்கியுள்ளது, இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்து கமிஷன் குறித்து அதிகப்படியான விளம்பரம் செய்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.
இவர்கள் தான் டார்கெட்
இவர்களின் இலக்கு எல்லாம் குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான பணத்தைச் சேர்க்க வேண்டும் என எண்ணம் கொண்ட மக்களாக இருக்கிறார்கள், இவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அதிகப்படியானோரைச் சேர்த்து சுமார் 1500 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
1500 கோடி ரூபாய்
2014 முதல் இயங்கி வரும் இந்நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களிடம் பெறும் பதிவு கட்டணம், அவர்களிடம் விற்பனைக்காகக் கொடுக்கப்படும் பொருட்களுக்குக் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் மூலம் சுமார் 1500 கோடி ரூபாய் அளவிலான பணத்தைச் சேர்த்துள்ளனர்.
MRP விலை
அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் தலைமையில் இயங்கும் இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப்படும் பொருட்களின் MRP விலையில் 20 சதவீதத்தில் கொடுக்கிறது என்பதால் முதலீட்டாளர்களுக்கு (மக்கள்) 80 சதவீதம் லாபம் கிடைப்பதாக நம்பி பொருட்களை இந்நிறுவனத்திடம் இருந்து வாங்கி வெளி சந்தையில் விற்பனை செய்கிறார்கள், ஆனால் இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் வழங்கும் பொருட்களுக்கு மதிப்பே இல்லை என்பது தான் உண்மை.
போலி நிறுவனம்
அமலாக்க துறை விசாரணையில் அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் ஆகியோர் 10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை Indusviva Group கீழ் இருக்கும் சில போலி நிறுவனங்களுக்கும் தங்களது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கும் பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications