இந்தியாவில் உள்ள வங்கிகள் பெரும்பாலும் நல்ல முறையில் இயங்கி வந்தாலும் ஒரு சில அதிகாரிகளால் மோசடி நடைபெற்று வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் 30 கோடி ரூபாய் கடன் வழங்குவதில் மோசடி செய்த இந்தியன் வங்கியின் மூத்த அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை மோசடி செய்த வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.30 கோடி மோசடி
சென்னை இந்தியன் வங்கியின் 4 மூத்த அதிகாரிகள் 30 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 4 வங்கி அதிகாரிகள் மற்றும் 2 பேருக்கு தலா ₹10,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
4 பேர் யார் யார்?
சென்னை இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் அஜீஸ், மூத்த மேலாளர் ஜி.வி.சீனிவாசன், மூத்த மேலாளர் முத்தையா, பொது மேலாளர் எஸ்.அருணாச்சலம் ஆகியோருக்கு தலா ₹10,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
37 மாதங்கள் கடுங்காவல் தண்டனை
அதேபோல் M/s கிரண் ஓவர்சீஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சீவ் பத்ரா மற்றும் அவரது மனைவி கிரண் பத்ரா ஆகிய இருவருக்கும் தலா ₹10,000 அபராதத்துடன் 37 மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் சென்னை கிரண் ஓவர்சீஸ் லிமிடெட் மற்றும் டெல்லியில் உள்ள எம்/எஸ் கிரண் ஓவர்சீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ₹10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புகார்
சென்னை இந்தியன் வங்கி கிளையில் ரூ.30 கோடி மோசடி நடந்ததாக இந்தியன் வங்கியின் புகாரின் பேரில் புலனாய்வு நிறுவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் M/s கிரண் ஓவர்சீஸ் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் மோசடி செய்து, சென்னை ஆயிரம் விளக்கு கிளை இந்தியன் வங்கிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டது.
போலி ஆவணங்கள்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொய்யான மற்றும் போலி ஆவணங்களை வங்கி கடனுக்காக வங்கியில் சமர்ப்பித்ததாகவும், இந்தியன் வங்கியின் அதிகாரிகளால் எந்தவிதமான அனுமதியின்றி இந்தியன் வங்கியின் நிதி நலன்களை பாதுகாக்காமல் கடன் தொகை வங்கி அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டது என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதால், இந்தியன் வங்கிக்கு ₹39.18 கோடி இழப்பு ஏற்பட்டது.
ரத்து
இந்த மோசடி வழக்கின் விசாரணையின் போது, இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 4 பொது ஊழியர்கள் இறந்ததால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது.
தண்டனை
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு தண்டனை விதித்தது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications