ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது உண்மை. கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் வெற்றிக்கு பின்னால் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளார். இவர் புகழ் வெளிச்சத்தில் இருந்து எப்போதுமே ஒதுங்கி இருக்க வேண்டும் என விரும்புபவர்.
பணக்கார மற்றும் நன்கு படித்த குஜராத்தி குடும்பத்தை சேர்ந்த அஞ்சலி மும்பையில் 1967 நவம்பர் 10ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஆனந்த் மேத்தா பிரபல தொழிலதிபர், தாயார் அன்னாபெல் இங்கிலாந்து வம்சாவளியை சேர்ந்தவர்.

அஞ்சலி மேத்தா மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு மருத்துவம் படித்தார். 1990ல் சச்சினை முதல் முறையாக சந்தித்தார். பின்பு இருவரும் சுமார் 5 ஆண்டுகள் காதலித்தனர். 1995 மே 24ல் சச்சினை கரம் பிடித்ததையடுத்து அஞ்சலி மேத்தா அஞ்சலி டெண்டுல்கர் ஆனார்.
இவர் ஒரு குழந்தை மருத்துவர், ஒரு கட்டத்தில் குடும்பத்தை பார்ப்பதற்காக மருத்துவத்தை கைவிட்டார். சச்சின்-அஞ்சலி தம்பதியினருக்கு அர்ஜூன் டெண்டுல்கர் என்ற மகனும், சாரா டெண்டுல்கர் என்ற மகளும் உள்ளனர்.
சச்சினின் புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அவருக்கு ஆதரவாக அஞ்சலி இருந்தார். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரின் மனைவியாக இருப்பதால் அவர் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் வெளிச்சம் இருந்தாலும், அவர் எளிமையை பராமரிக்கிறார் மற்றும் தனிப்பட்ட முறையில் அறியப்படுகிறார்.
ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார். கணவரின் புகழ் இருந்தபோதிலும், தனது குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி எளிமையாக இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதை நூலில், தனது மனைவி அஞ்சலி பற்றி பெருமையாக குறிப்பிட்டுள்ளார். எனக்கு ஆதரவாக, துணையாக இருப்பதற்காக மருத்துவம் பார்ப்பதை மற்றும் உயர்கல்வி படிக்கும் ஆசையை கைவிட்டார்.
இது மிகப்பெரிய தியாகம். இதனால்தான் என்னால் கிரிக்கெட்டில் நிம்மதியாக ஈடுபட முடிந்தது என்று சச்சின் தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1,300 கோடி என கூறப்படுகிறது.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications