கொரோனா வைரஸால் பில் கேட்ஸ், முகேஷ் அம்பானி போன்ற உலக பணக்காரர்கள் தொடங்கி, குமார மங்கலம் பிர்லா, பலோன்ஜி மிஸ்த்ரி, கோத்ரேஜ் குடும்பம், ஹிந்துஜா குடும்பம் போன்ற இந்தியப் பணக்காரர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.
சாதாரண ஏழை எளிய மக்கள் வரை, எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால் அடித்தட்டு மக்கள், அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பவர்கள், கூலித் தொழிலாளிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் தான் இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.
அப்படி, கொரோனா வைரஸ் லாக் டவுனால் வேலை இழந்த பல தொழிலாளர்களுக்கு ஒரு மும்பை மசூதி உணவு வழங்கி வருகிறதாம்.
உணவு
மும்பையின் புற நகர் பகுதிகளில் ஒன்று தான் சகினகா (Sakinaka). இந்த பகுதியில் இருக்கும் மசூதியில் தான் சுமார் 800 பேருக்கு உணவு கொடுக்கிறார்களாம். இந்த 800 பேரும், கொரோனா வைரஸ் லாக் டவுனால் தங்கள் வேலையை இழந்தவர்கள். அவர்களின் பசியை போக்கத் தான் சகனிகா பகுதி மசூதி களத்தில் இறங்கி உணவுகளை வழங்கிக் கொண்டு இருக்கிறது.
ரேஷன் பொருட்கள்
அது போக மும்பை சகினகா மசூதிக்கு அருகில் வாழும் மக்களுக்குத் தேவையான அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களையும், மசூதி கொடுப்பதாகச் சொல்கிறார் மெளலானா அதிஃப் சனபலி (Maulana Atif Sanabali). மேலும் பசியைப் பற்றி நறுக்கென ஒரு வார்த்தை சொல்லி இருக்கிறார்.
பசி பயங்கரம்
"தற்போது பரவிக் கொண்டு இருக்கும் கொரோன வைரஸைப் போல பசியும் ஒரு கொடூரமான விஷயம் தான். பசி மதத்தைப் பார்ப்பதில்லை, அது எல்லோரையும் பாதிக்கும். எங்கள் குறிக் கோள் ஒன்று தான் பசியோடு யாரும் தூங்கக் கூடாது" எனச் சொல்லி இருக்கிறார் சனபலி.
சுத்த பத்தம்
கொரோனா வைரஸை எதிர் கொள்ள அரசு வலியுறுத்தும் சமூக விலகளை கடை பிடித்து தான் உணவுகளை பரிமாறுகிறார்களாம். அதோடு உணவை சுத்தமான முறையில் தயாரிப்பதாகவும் சொல்லி இருக்கிறார் மெளலானா அதிஃப் சனபலி (Maulana Atif Sanabali). மனிதம் மலரட்டும், அன்பு பெருகட்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications