புதிய இந்து சம்வத் 2081 ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்தியப் பங்குச் சந்தை நல்ல தொடக்கத்தைக் கண்டது. சென்செக்ஸ் குறியீடு 335 புள்ளிகள் உயர்ந்து 79,724 புள்ளிகளாகவும், நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 24,304 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி வங்கி குறியீடு 197 புள்ளிகள் உயர்ந்து 51,673 புள்ளிகளாகவும், மிட்கேப் இன்டெக்ஸ் 376 புள்ளிகள் உயர்ந்து 56,489 புள்ளிகளாகவும் முடிவடைந்தது முதலீட்டாளர்கள் புதிய சம்வத் 2081 ஆம் ஆண்டிற்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்து ஊக்குவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆரம்பம் முதல் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து தொடர்ந்து 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியில் இருந்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 3.29 சதவீதம் உயர்ந்து 2817 ரூபாய் அளவில் முடிந்தது.
மஹிந்திராவுக்கு அத்தப்படியாக அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியவை தலா 1 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதை தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே, என்டிபிசி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, டைட்டன், டாடா ஸ்டீல் ஆகியவை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி (0.04%), டெக் மஹிந்திரா (0.33%), ஹெச்சிஎல் டெக் (0.55%) ஆகியவை சிறிய அளவிலான சரிவை பதிவு செய்துள்ளது.
நிஃப்டி குறியீட்டில் 100, 200, 500, மிட்கேப், ஸ்மால்கேப், லார்ஜ் கேப், மைக்ரோ கேப் என அனைத்து குறியீடுகளும் உயர்வுடன் முடிந்துள்ளது. துறை வாரியாக பார்க்கும் போது ஆட்டோமொபைல் குறியீடு 1.24 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இன்று நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாதாந்திர விற்பனை விவரங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஆட்டோமொபைல் பங்குகள் பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தன. இதில் முக்கியமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இந்த வருடத்திலேயே அதிகப்படியான வாகனங்களை விற்பனை செய்து மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்த பிறகு, நிஃப்டி குறியீட்டிலும், சென்செக்ஸ் குறியீட்டிலும் அதிக லாபம் பெற்ற நிறுவனமாகத் திகழ்கிறது.
ONGC, அடானி போர்ட்ஸ், BEL, டாடா மோட்டார்ஸ் மற்றும் டைட்டன் ஆகியவை நிஃப்டியின் அதிகம் லாபம் பெற்ற நிறுவனங்களாக உள்ளது. NCC, RBL, Vi, PNB, NBCC, Aarti Ind ஆகியவை நிஃப்டி குறியீட்டின் அதிகம் இழப்பை சந்தித்த நிறுவனங்களாக உள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தரராமன் ராமமூர்த்தி, முதலீட்டாளர்களுக்கு சம்வத் 2081 ஆண்டு ஆரோக்கியமான வருமானத்தைத் தரும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.
More From GoodReturns

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

பாகிஸ்தான்-க்கு மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி.. பாவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications