டெல்லி: நாட்டின் முதன்மை கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன் அளவு கடந்த மார்ச் 2019ம் ஆண்டுடன் முடிவடைந்த காலாண்டில், ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட 11,932 கோடி ரூபாய் குறைந்துள்ளது என அவ்வங்கி பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கடந்த 2019ம் நிதியாண்டில் எஸ்பிஐயின் வாரக்கடன் அளவு 1,84,682 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது. இதே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், தனது மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 1,72,750 கோடி ரூபாய் என வங்கி வெளியிட்டுள்ளது. இதன் படி 11,932 கோடி ரூபாய் குறைந்துள்ளது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, நிகர வாரக்கடன் அளவு 77,827 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது என எஸ்பிஐ கூறியுள்ளது. இதே எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 65,895 கோடி ரூபாயா நிகர வாரக்கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வாராக்கடன் அளவு மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது காலாண்டிற்கான மொத்த வாராக்கடன் விகிதம் 3,143 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதே நிகர வாராக்கடன் விகிதம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 687 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மார்ச் 2019-வுடன் முடிவடைந்த காலாண்டில் எஸ்பிஐ-யின் நிகரலாபம் 862 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக நஷ்டத்தில் இருந்த நாட்டின் முன்னணி வங்கி, கடந்த 2019ம் நிதியாண்டில் லாபத்திற்கு திரும்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் அதிகரிப்பும், சொத்து மதிப்பும் தான் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 18.03 சதவிகிதம் அதிகரித்து 88,349 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 74,854 கோடி ரூபாய் நிகர வட்டி வருவாயை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே வாரக்கடன்களின் அளவும் முந்தைய ஆண்டினை விட குறைந்துள்ளதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் பங்கு விலையானது 1 சதவிகிதம் குறைந்து 313 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications