ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகரித்து வரும் அதிநவீன டீப்பேக் மோசடி வீடியோக்கள் குறித்த எச்சரிக்கை பதிவை X தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோக்கள் சமீப காலமாக அதிக அளவில் பரவி வருகின்றன. அந்த வீடியோவில் இந்திய அரசாங்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து எஸ்பிஐ, AI மூலம் இயங்கும் முதலீட்டு தளத்தை உருவாக்கியுள்ளதாகவும், இதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்றும் பொய்யாக பகிரப்பட்டுள்ளது.
வெளியான மோசடி வீடியோக்களில் எஸ்பிஐ, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கி வரும் முதலீட்டு தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், இந்த தளம் எஸ்பிஐ பேங்க்-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

SBI ஒரு நம்பகமான பொதுத்துறை வங்கி என்பதால் அதன் பெயரை பயன்படுத்தி தான் இந்த மோசடிக்கு நம்பகத்தன்மையை உருவாக்குகின்றனர். சில வீடியோக்களில் எஸ்பிஐ வங்கியின் லோகோக்கள் மற்றும் போலியான அறிக்கைகள் கூட இடம்பெறலாம். இதன் மூலம் உண்மையிலேயே, இது எஸ்பிஐ திட்டம் தான் என்று மக்கள் நம்புவார்கள்.
AI மோசடி எவ்வாறு செயல்படுகிறது?: டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பம் என்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டிப் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு நபரின் உருவத்தை போலியாக உருவாக்கி, அவருக்கு குரல் கொடுத்து அவரே பேசுவது போல போலியான வீடியோக்களை உருவாக்கும் தொழில்நுட்பமாகும். ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நபரின் முகபாவனைகள், உதடு அசைவுகள் போன்றவற்றை வைத்து தத்ரூபமான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதை தான் மோசடி செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த போலி வீடியோக்களில் உயர் அதிகாரிகள் பேசுவது போலவும், மக்கள் இந்த திட்டங்களை உண்மையானவை என்று நம்பும் அளவிற்கு தத்ரூபமானதாகவும் காண்பிக்கின்றனர். வீடியோவில் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கின்றனர். இதனால் பலர் ஆசைப்பட்டு உண்மைதன்மையை ஆராயாமல் முதலீடு செய்ய முன்வருகின்றனர்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதுபோன்ற வீடியோக்கள் பகிரப்பட்டால்.. அதன் உண்மை தன்மையை ஆராய அதிகாரபூர்வ இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல இது போன்ற பதிவுகள் வெளியாகும்போது அருகில் உள்ள எஸ்பிஐ கிளைகளுக்கு சென்று தகவல்களைச் சரி பார்க்கலாம்.
X பதிவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இது போன்ற எந்த ஒரு முதலீட்டு திட்டத்தையும் எஸ்பிஐ உருவாக்கவில்லை என்றும், முதலீட்டு தொடர்பான எந்த ஒரு தளமும் எஸ்பிஐ-யால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இது போன்ற வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என்றும் அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிர்மலா சீதாராமன் ஒரு முதலீட்டு தளத்தை ஆதரிப்பது போன்ற டீப்பேக் வீடியோ இணையத்தில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications