தங்கத்தை எந்த வடிவில் விற்றால் அதிக வரி சேமிக்க முடியும்? முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.!

சமீபத்தில், உலகளாவிய காரணிகள் மற்றும் பண்டிகை கால சந்தை காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் பல மடங்கு உயர்ந்தன. இந்த விலை உயர்வை பயன்படுத்திக் கொள்ள பல முதலீட்டாளர்கள் தங்க நகைகள், சவரன் தங்கப் பத்திரங்கள் (SGBs) மற்றும் கோல்டு ETF-கள் போன்றவற்றை விற்று லாபம் பார்த்தனர். ஆனால், தங்கம் எந்த வடிவில் விற்கப்படுகிறது, எத்தனை காலம் வைத்திருந்து விற்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, அதன் மீதான வரி விதிப்பு விதிகள் சிக்கலானதாக உள்ளன.

சவரன் தங்கப் பத்திரங்களுக்கு வரிச் சலுகை (SGBs) : சவரன் தங்கப் பத்திரங்கள் (SGBs) என்பது மத்திய அரசால் வழங்கப்படுபவை. இவை வரிச் சலுகையின் காரணமாகவே பலராலும் விரும்பப்படுகின்றன.

தங்கத்தை எந்த வடிவில் விற்றால் அதிக வரி சேமிக்க முடியும்? முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.!

முழு வரி விலக்கு உறுதி : இந்த SGB-களை முதிர்வு காலமான 8 ஆண்டுகள் வரை தொடர்ந்து வைத்திருந்து பணமாக மாற்றினால், அதனால் கிடைக்கும் மொத்த லாபத்திற்கும் (Capital Gain) முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

முன்கூட்டியே பணமாக்கினாலும் விலக்கு : 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி (RBI) மூலமாக முன்கூட்டியே பணமாக்கினாலும், அதற்கும் மூலதன ஆதாய வரி கிடையாது. இருப்பினும், இந்தச் சலுகை நீங்கள் பங்குச் சந்தை மூலம் இந்தப் பத்திரங்களை விற்கும்போது கிடைப்பதில்லை.

பங்குச் சந்தை விற்பனைக்கு வரி எவ்வளவு..?: சவரன் தங்கப் பத்திரங்களோ அல்லது கோல்டு ETF யூனிட்களோ பங்குச் சந்தையில் விற்கப்பட்டால், விற்கப்படும் காலத்தைப் பொறுத்து வரி விகிதம் மாறுபடும்.

குறுகிய காலம் (12 மாதங்களுக்குள்) : முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் விற்றால், கிடைக்கும் லாபம் முழுமையும் உங்களின் அன்றாட வருமானமாக கருதப்பட்டு, உங்கள் வருமான வரி விகிதத்திற்கேற்ப (Tax Slab) வரி விதிக்கப்படும்.

நீண்ட காலம் (12 மாதங்களுக்குப் பிறகு): ஒரு வருடத்திற்கு பிறகு விற்றால், 12.5% என்ற குறைந்த விகிதத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) விதிக்கப்படும்.

2024 மத்திய பட்ஜெட் மாற்றங்களுக்குப் பிறகு, தங்க முதலீடுகளுக்கான பணவீக்க சரிசெய்தல் (Indexation Benefit) இப்போது நீக்கப்பட்டுவிட்டது. அதனால், முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது காத்திருந்து விற்றால், 12.5% என்ற குறைந்த வரியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டலாம்.

லாபத்தை முதலீடு செய்து வரி சேமிக்க வேண்டுமா..?: சவரன் தங்கப் பத்திரங்கள் அல்லது ETF-களை விற்றுப் பெறும் லாபத்தை, பொதுவாக மூலதன ஆதாயப் பத்திரங்களில் (Capital Gains Bonds) முதலீடு செய்து வரி விலக்கு பெற முடியாது. ஆனால், தற்போதும் வரி விலக்கு பெற ஒரு வழி உள்ளது. நீங்கள் தங்க நகைகள் அல்லது கலைப் பொருட்களை விற்றால் (தங்கப் பத்திரங்கள் அல்ல), அதில் இருந்து கிடைக்கும் மொத்தத் தொகையையும் ஒரு புதிய வீடு வாங்குவதில் முதலீடு செய்தால், வரி விலக்கு பெறலாம் (பிரிவு 54(F)). தங்க நகை விற்பனை தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் புதிய சொத்தை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், நகைகள் விற்ற பெரிய லாபத்தின் மீது வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும்.

உதாரணமாக, நீங்கள் ரூ.2 லட்சத்திற்கு வாங்கிய தங்க நகைகளை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.10 லட்சத்திற்கு விற்றால், உங்களுக்கு கிடைத்த லாபம் ரூ.8 லட்சம் ஆகும். புதிய விதிகளின்படி, இந்த ரூ.8 லட்சம் லாபத்திற்கு 12.5% நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும். ஆனால், நீங்கள் இந்த ரூ.10 லட்சம் முழுவதையும் புதிய வீட்டுச் சொத்து வாங்குவதற்காக முதலீடு செய்தால், நீங்கள் வரி கட்ட வேண்டியதில்லை. மேலும், இந்த லாபத்தை கொண்டு இரண்டு சொத்துகளை கூட வாங்கலாம். 2025 நிதி மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், வீட்டுச் சொத்தில் முதலீடு செய்து வரி விலக்கு பெறும் இந்தச் சலுகை தொடர்ந்து நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+