கடந்த சில நாட்களாக சென்செக்ஸ், தொடர்ந்து மிகப் பெரிய சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று காலை கூட சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சுமாராக 10 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது.
எனவே இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் பங்குச் சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ் 32,778 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை 31,214 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி 29,388 என்கிற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நிறுத்தத்துக்குப் பிறகு, இப்போது சென்செக்ஸ் சுமாராக 32,800 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
3,300 புள்ளிகள்
ஆக சென்செக்ஸ்-ன் நேற்றைய குளோசிங் புள்ளி உடன், இன்றைய குறைந்தபட்ச புள்ளியை ஒப்பிட்டால் சுமாராக 3,350 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. வர்த்தக நிறுத்தத்துக்குப் பின், தற்போது சென்செக்ஸ் ஒருவழியாக தன் வீழ்ச்சிகளை சரி செய்து கொண்டது. ஆக சென்செக்ஸ் இப்போது 22 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நிஃப்டி
நேற்று மாலை 9,590 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்து இருந்தது நிஃப்டி. ஆனால் இன்று காலை 9,107 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. குறைந்தபட்சமாக 8,555 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆக நிஃப்டி சுமாராக 1,035 புள்ளிகள் சரிந்தது.
மீட்சி
சரிந்த புள்ளிகள் எல்லாம், வர்த்தக நிறுத்தத்துக்குப் பிறகான வியாபாரத்தில், மீண்டும் மேலே வரத் தொடங்கி இருக்கின்றன. தற்போது நிஃப்டி வெறும் 57 புள்ளிகள் சரிவில், 9,532 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்றைய வர்த்தகம் ஏற்றத்தில் முடியுமா என்கிற கேள்வி வர்த்தகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.