அமெரிக்காவின் பெஞ்ச்மார்க் 10 ஆண்டு பத்திர முதலீட்டில் கிடைக்கும் லார அளவுகள் கடந்த வாரம் 29 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.29 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் இது மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியை பதிவு செய்து ஆசிய சந்தைக்கு இன்றைய வர்த்தகம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
அமெரிக்க பத்திர முதலீட்டின் லாப அளவுகள் குறைய முக்கியமான காரணம் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு, ஊதிய பாதிப்புகள் தணிந்தது, அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்துவதையும், குறைப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஆகியவையும் அடங்கும்.

இதேநேரத்தில் ரஷ்யா ஒரு நாளுக்கு 3 லட்சம் பேரல்களும், சவுதி அரேபியாவின் 10 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பை டிசம்பர் மாதம் வரையில் நீட்டிக்க உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வது மட்டும் அல்லாமல் அமெரிக்காவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே ஆசிய சந்தையில் உயர்வை பதிவு செய்யப்பட்ட நிலையில் நிஃப்டி குறியீடு இன்று அதன் முந்தைய முடிவான 19,230.60 புள்ளிகளுக்கு எதிராக 19,345.85 இல் துவங்கி, அதிகபட்சமாக 19,423 புள்ளிகளை தொட்டு வர்த்தக முடிவில் நிஃப்டி 181 புள்ளிகள் அதிகரித்து 19,411.75 இல் முடிவடைந்தது.
இதேபோல் சென்செக்ஸ் குறியீடு அதன் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவான 64,363.78 புள்ளிகளுக்கு எதிராக 64,835.23 புள்ளிகளில் துவங்கி அதிகபட்சமாக 64,992.54 புள்ளிகளை தொட்டு வர்த்தர முடிவில் சென்செக்ஸ் 594.91 புள்ளிகள் அதிகரித்து 64,958.69 புள்ளிகளில் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ (0.65 சதவீதம் சரிவு), டைட்டன் (0.32 சதவீதம் சரிவு), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (0.29 சதவீதம் சரிவு) மற்றும் டாடா மோட்டார்ஸ் (0.29 சதவீதம் சரிவு) ஆகிய நான்கு பங்குகள் மட்டுமே டாப் 30 நிறுவனங்கள் பட்டியிலில் சரிந்துள்ளது.
மிட் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் வலுவான லாபத்தைக் கண்டு நிலையில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.90 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவீதமும் உயர்ந்தது.
மேலும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பீடு 315.2 லட்சம் கோடி ரூபாயில் இருவ்து சுமார் 318.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்ததுள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் டிஎல்எப், ஓஎன்ஜிசி, பவர் கிரிட், ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் சேமோட்டோ உட்பட 250 க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் இன்று புதிய 52 வார உச்சத்தை எட்டின. இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலைகள் ஏறக்குறைய 2 சதவீதம் உயர்ந்தன.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications