2020 இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆண்டாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.
2019ல் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மந்தமாக இருந்த நிலையில் 2020ல் மிகப்பெரிய நம்பிக்கையுடன் துவங்கியது. ஆனால் கொரோனா தொற்றும் அதன் பின்பு அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகளின் எதிரொலி மும்பை பங்குச்சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் மும்பை பங்குச் சந்தை மார்ச் மாதம் எதிர்கொண்ட மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டு 2020ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வளர்ச்சி பதிவு செய்து புதிய வரலாற்று உச்சமான 47,896.97 புள்ளிகளை அடைந்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் வெறும் 0.20 சதவீத சரிவை எதிர்கொண்டாலும் 14,000 புள்ளிகளைத் தாண்டி 14,024 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 2020ஆம் ஆண்டு வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 15 சதவீத உயர்வையும், நிஃப்டி குறியீடு 14.9 சதவீத உயர்வையும் அடைந்துள்ளது.
இதேவேளையில் சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பங்குச்சந்தையின் 25 வருடப் பயணத்தைக் குறித்து மோதிலால் ஆஸ்வல் பைனான்ஸ் சர்வீசஸ் ஒரு முக்கிய ஆய்வு செய்து அறிக்கையில் கடந்த 25 வருடத்தில் அதாவது 1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பங்குச்சந்தையில் வேகமாகச் செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாக இன்போசிஸ்-ஐயும், மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐயும் அறிவித்துள்ளது.
1995 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இன்போசிஸ் ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியுடன் வேகமாகச் செல்வத்தை உருவாக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 688 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இக்காலகட்டத்தில் வெறும் 300 கோடி ரூபாயில் இருந்து 2.73 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 25 வருட வர்த்தகத்தில் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கிய நிறுவனமான விளங்குகிறது. சுமார் 6.3 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டுக்கு உயர்ந்துள்ள ரிலையன்ஸ், 2015 முதல் 2020ஆம் ஆண்டுக் காலத்தில் மட்டும் சுமார் 4.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications