வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவிலேயே தொடங்கியுள்ளன.
வாரத்தின் முதல் மூன்று நாட்கள் ஏற்றத்தில் புதிய உச்சத்தினை கண்டு வந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக சரிவினைக் கண்டுள்ளது. இது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தைகளும் சரிவில் தொடங்கியுள்ளன.
ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சற்று இறக்கம் கண்டு காணப்பட்டது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 95 புள்ளிகள் குறைந்து, 43,262.07 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 40.40 புள்ளிகள் குறைந்து 12,650.40 ஆகவும் தொடங்கியது.
கடந்த வாரத்தில் அன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரிப்பு காரணமாகவே சந்தை புதிய உச்சத்தினை கண்டு வந்த நிலையில், நேற்று நிதி ஊக்கம் பற்றிய அறிவிப்பின் எதிரொலியாக இந்திய சந்தைகள் சற்று தடுமாற்றத்தில் முடிவடைந்தன. எனினும் சந்தையில் நடப்பு மாதத்தில் 31,296 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வரத்து வந்துள்ளது. இதுவே அக்டோபர் மாதத்தில் 14,537.40 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்தது. அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வரத்து அதிகப்படியான வீழ்ச்சியினை தடுத்துள்ளது எனலாம். அதோடு புராப்பிட் புக்கிங் காரணமாகவும் சந்தை சற்று சரிவினைக் கண்டு வருகிறது.
இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் பெரும்பாலும் சற்று சரிவிலும், சிலவை மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, லார்சன், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் ரிலையன்ஸ், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ, லார்சன், ஆக்ஸிஸ் வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 131.94 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 43,225.25 ஆகவும், இதே நிஃப்டி 36.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 12,654.45 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.