அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்தியதை தற்காலிகமாக நிறுத்தியதற்கு ஏற்ற வகையில் அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்ததை விட குறைவான அளவீட்டை பதிவு செய்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்க பத்திரங்கள் மீதான அவுட்லுக் மாற்றியது மூலம் அமெரிக்க பத்திர சந்தையில் இருந்த முதலீடு வெளியேறி பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையில் குவிந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை சாதகமான சூழ்நிலையில் இந்திய பங்குச்சந்தையும் உயர்வுடன் துவங்கி முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இன்று காலை வர்த்தகம் துவங்கி ஒரு மணிநேரத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 630 புள்ளிகள் உயர்ந்து 65,578.95 புள்ளிகளையும் ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 19,653.35 புள்ளிகளை அடைந்தது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 742 புள்ளிகள் உயர்ந்து 65,675.93 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 231.90 புள்ளிகள் உயர்ந்து 19,675.45 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 813.78 புள்ளிகள் உயர்ந்து பங்குச்சந்தை சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பை 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்க நுகர்வோர் விலை குறியீடு அக்டோபர் மாதம் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் செப்டம்பர் மாதத்தில் 3.7% உயர்ந்த பிறகு, அக்டோபர் மாதத்தில் 3.2% ஆக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபரில் நான்கு மாதங்களில் குறைந்தபட்சமாக 4.87% ஆக குறைந்துள்ளது.
மேலும் வால் ஸ்ட்ரீட் தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் திங்களன்று இந்திய பங்குகளை marketweight அளவில் இருந்து overweight என்ற நிலைக்கு உயர்த்தியது. இதன் அமெரிக்க பத்திர சந்தையில் இருந்து வெளியேறிய அதிகப்படியான முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையில் குவிந்துள்ளது.
இதன் வாயிலாக நீண்ட காலத்திற்கு பின்பு டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. மேலும் டாப் 30 நிறுவனங்களில் பவர் கிரிட், இண்டஸ்இந்த் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் ஆகியவை மட்டுமே சரிவுடன் காணப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications