இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. ஒரு காலத்தில் தொழில் உலகில் கொடி கட்டி பறந்தவர். ஆனால் தற்போது திவால் நிலையில் இருக்கிறார். அனில் அம்பானி மீது பல்வேறு நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வங்கிகளையும், பிடிஓ இந்தியா எல்எல்பி (BDO India LLP) என்ற தணிக்கை நிறுவனத்தையும் தடுத்த இடைக்கால உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நீதிபதி மிலிந்த் ஜாதவ் பிறப்பித்த டிசம்பர் 2025 ஆம் ஆண்டு உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. முந்தைய அந்த உத்தரவு சட்டவிரோதமானது மற்றும் பொருத்தமற்றது என இந்த அமர்வு குறிப்பிட்டது. பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), ஐடிபிஐ வங்கி (IDBI Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) மற்றும் பிடிஓ இந்தியா எல்எல்பி ஆகியவை தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது.

விசாரணையின்போது, தீர்ப்பை நான்கு வாரங்களுக்கு நிறுத்த அம்பானியின் வழக்கறிஞர் கோரினார். தடை நீக்கப்பட்டால் முந்தைய உத்தரவின் அடிப்படையிலான நிலுவை வழக்குகள் பாதிக்கப்படும் என்றார். ஆனால், நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது என பார் அண்ட் பெஞ்ச் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக தனக்கு மோசடி முத்திரை குத்தப்பட்டதால் தனது வணிக வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், நிதி திரட்டுவதையோ அல்லது சாதாரணமாக செயல்படுவதையோ கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகி விட்டது என்றும் அம்பானியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வங்கிகளின் தணிக்கை அறிக்கை முழுமையற்றது மற்றும் பிழைகளைக் கொண்டிருந்தது என்றார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (Reliance Communications) நிறுவனம் ஏற்கனவே திவால் நடவடிக்கைகளில் நுழைந்த பின்னரே தணிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், அதை ஒரு தீர்மான நிபுணர் நிர்வகித்து வந்தார் என்றும் அவர் கூறினார். பிடிஓ நிறுவனம் மேற்கொண்ட தணிக்கை ஒரு முறையான தணிக்கை அல்ல, மாறாக கணக்குகளின் வெறும் ஆய்வு மட்டுமே எனவும் அம்பானியின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் வெவ்வேறு துணை நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் ஒரே வணிகக் குழுவைச் சேர்ந்தவை என்ற போதும், அவை நிதி திசைதிருப்பல் என்று தவறாக விவரிக்கப்பட்டன என்பது மற்றொரு முக்கிய வாதமாகும்.
ஆனால் இந்த வாதங்களை இரு நீதிபதிகள் அமர்வு ஏற்காமல் இடைக்காலப் பாதுகாப்பை ரத்து செய்து, ரிசர்வ் வங்கியின் 2024 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களின்படி வங்கிகள் தொடர்ந்து அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அனில் அம்பானிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications