இந்த ஆண்டின் (2025) தொடக்கத்தில் இருந்து வெள்ளி விலை 59% மற்றும் தங்கத்தின் விலை 47% உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி (Nifty) வெறும் 4% மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த விகிதத்தை பார்க்கும்போது, இந்திய சந்தையில் பெரும் மாற்றம் வரப்போகிறதா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் : இந்திய பங்குச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். பலவீனமான காலாண்டு முடிவுகள், நிறுவனங்களின் மதிப்பீட்டு குறைப்பு, அமெரிக்க டாலரின் வலு மற்றும் வர்த்தகப் பதட்டங்கள் காரணமாக சுமார் ரூ.1.48 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர். இதன் விளைவாக, 2019 இறுதியில் 22% ஆக இருந்த அந்நிய முதலீட்டாளர்களின் பங்குகள், தற்போது 16% ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இந்த சரிவுக்கு மத்தியிலும் சில அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் வாய்ப்புகளை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டின் பங்குப் பிரிவின் தலைவர் ஸ்ரேயாஸ் தேவல்த்கர் கூறுகையில், "நிஃப்டியின் வருவாய் வளர்ச்சி மற்றும் துறை சார்ந்த சுழற்சி குறிப்பாக வங்கிகள், தொலைத்தொடர்பு மற்றும் ரசாயனத் துறைகள் போன்றவை தங்கத்தை விட சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. விலைமதிப்பற்ற தங்கங்கள் இப்போது வருவாய் வேகம் குறைய தொடங்கி, பங்குச் சந்தைக்கு சாதகமான ரிஸ்க்-ரிவார்டு விகிதம் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பங்குச் சந்தை இனி உயரும் : கடந்த 12 மாதங்களாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய பங்குச் சந்தை, இனி வலுப்பெற வாய்ப்புள்ளதாக உலகளாவிய வங்கி நிறுவனமான HSBC தெரிவித்துள்ளது. HSBC, இந்தியப் பங்குச் சந்தைக்கான தனது மதிப்பீட்டை நடுநிலை என்பதில் இருந்து ஓவர்வெயிட் என்று உயர்த்தியுள்ளது.
குறைந்த மதிப்பீடுகள், வருவாயில் மெதுவான மீட்பு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் குறைந்த நிலைப்பாடு ஆகியவை சந்தை குறித்து நேர்மறையான பார்வையை தருகின்றன. 12 மாத இடைவெளிக்கு பிறகு, அந்நிய முதலீடுகள் மீண்டும் வரத் தொடங்குவதற்கான சரியான சூழல் உருவாகியுள்ளது என்று HSBC தெரிவித்துள்ளது.
தங்கம், வெள்ளியின் அசுர வளர்ச்சி ஏன்..? : உலகளாவிய வர்த்தகப் பதட்டங்கள், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவது மற்றும் ஃபெடரல் வங்கியின் கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை வலுவான தொழில் துறை தேவை மற்றும் விநியோக சங்கிலி தடைகள் காரணமாக பிம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக யூனியன் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் பங்குப் பிரிவின் தலைவர் சஞ்சய் பெம்பால்கர் கூறுகையில், பல மத்திய வங்கிகள், அமெரிக்க டாலர் மீதான தங்களது அபாயத்தை குறைக்க, விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்கின்றன. இந்த வாங்குதல் எவ்வளவு காலம் தொடரும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் மூத்த பகுப்பாய்வாளர் ஜிகர் த்ரிவேதி கூறுகையில், உலகளாவிய விநியோக பற்றாக்குறை, முதலீட்டாளர்களின் ஆர்வம் மற்றும் வலுவான தொழில் துறை தேவை ஆகியவற்றால், வெள்ளி அடுத்த 6 மாதங்களுக்கு கிலோவுக்கு ரூ.1,70,000 முதல் ரூ.1,75,000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போதைய நிலைகள் வெள்ளியில் முதலீடு செய்ய சரியான நேரம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Marcellus இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் ஆய்வு பிரிவின் தலைவர் கிருஷ்ணன் வி.ஆர். கூறுகையில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் கடந்த ஓராண்டில் சாதனை வருமானத்தை அளித்துள்ளதால், நான் இப்போது அதில் 8 முதல் 10% க்கு மேல் முதலீடு செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
2025-இன் இறுதிப் பகுதியில், இந்திய பங்குச் சந்தைகள் ஒரு திருப்புமுனையில் நிற்கின்றன. அந்நிய முதலீட்டாளர்களின் நிலைப்பாடு குறைவாக உள்ளது. அதேபோல், மதிப்பீடுகள் சரிந்துள்ளன. விலைமதிப்பற்ற உலோகங்களின் எழுச்சி நீடித்தாலும், வரும் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்ந்து செயல்பட வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!



Click it and Unblock the Notifications