உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை கடைப்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹலால் சான்றிதழை வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க மத உணர்வுகளை சாதகமாக பயன்படுத்தியதாக பல நிறுவனங்களுக்கு எதிராக அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஹலால் சான்றிதழ் அளிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி ஹலால் சான்றிதழுக்கு உத்தர பிரதேச அரசு தடை விதித்தது. உணவுப் பொருட்களின் ஹலால் சான்றிதழ் என்பது உணவு பொருட்களின் தரம் தொடர்பான குழப்பத்தை உருவாக்கும் ஒரு இணையான அமைப்பாகும்.

ஹலால் தர சான்றுடன் கூடிய உணவு பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உடனடியாக தடை செய்யப்படுகிறது. அதேசமயம், ஏற்றுமதிக்காக தயார் செய்யப்படும் பொருட்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறீ செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுகளை விற்பனை செய்ய யோகி அரசு தடை விதித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹலால், ஹலால் சான்றிதழ் குறித்து சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
1974ல் முதன் முதலில் அறுக்கப்பட்ட இறைச்சிக்காக ஹலால் சான்றிதழ் வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்டது. இஸ்லாமிய முறையில் பெறப்படும் இறைச்சி ஹலால் இறைச்சி என கூறப்படுகிறது. விலங்குகள் தொண்டை, உணவுக்குழாய் மற்றும் கழுத்து நரம்புகள் வழியாக கொல்லப்பட வேண்டும்.
ஹலால் சான்றிதழ், உணவு சுத்தமானதாகவும், இஸ்லாமிய சட்டத்தின்படியும் சமைக்கப்பட்டதையும் உறுதி செய்கிறது. ஹலால் உணவு என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் (எஃப்.ஏ.ஓ.) இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட உணவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து சட்டப்பூர்வ நில விலங்குகளும் புதிய இறைச்சிக்கான பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பயிற்சியின் கோடெக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க வெட்டி கொலை செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் வழங்குகின்றன, முஸ்லிம்கள் உட்கொள்ளும் உணவு அல்லது பொருளை குறிப்பிடுகின்றன. இந்த ஹலால் சான்றளிக்கும் நிறுவனங்களில் சிலவற்றை இந்திய அரசாங்கம் அங்கீகரித்தாலும், அவற்றில் சிலவற்றுக்கு இன்னும் அங்கீகாரம் இல்லை.
சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் பெற்ற டீ ப்ரீமிக்ஸ் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு பயணி ஹலால் சான்றிதழுடன் கூடிய தேநீர் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார். இதனையடுத்து அந்த தேயிலை ப்ரீமிக்ஸ் பிற நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான அங்கீகாரம்.
இந்த சான்றிதழ் இஸ்லாத்தை கடைபிடிக்கும் நாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது என்று கார்ப்பரேஷன் விளக்கம் கொடுத்தது. எனவே ஹலால் என்பது இறைச்சியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. சில அழகுசாதன பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது இது மது மற்றும் பன்றி கொழுப்பு போன்ற ஹராம் பொருட்கள் இல்லாதது என்பதை குறிப்பிடுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications