தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 12% லாபம் – வருவாய் துறை செயலாளர்

டெல்லி: தங்க பத்திரங்கள் வட்டியுடன் சேர்த்து கண்டிப்பாக 12 சதவிகிதம் லாபத்தை தரும் என வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைத்தார். இதனால் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது. எனவே தங்க பத்திரங்களுக்கான டிமாண்ட் குறைந்து மக்கள் மீண்டும் தங்க நகைகள் பக்கம் திரும்பி விடுவார்கள் என்ற வாதம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருந்தாலும் தங்கத்தில் சிறந்த முதலீடு என்றால் அது தங்க பத்திரமாகத் தான் இருக்கும் எனக் கூறியுள்ளார். ஏனெனில் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் கண்டிப்பாக 12 சதவிகிதம் லாபத்துடன் தான் அதனை திரும்ப எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். 12 சதவீத லாபம் என்பது குறைவானது கிடையாது எனக் கூறியுள்ளார்.

 தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 12% லாபம் – வருவாய் துறை செயலாளர்

தற்போது வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 9 முதல் 11 சதவீதம் வரை லாபம் பெறுகிறார்கள். அது மட்டும் இன்றி அரசும் அவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியை வழங்குகிறது என சுட்டிகாட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மோசமான நிலைக்கு சென்றதை அடுத்து இறக்குமதியை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு தான் அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. தற்போது நடப்பு கணக்கு பற்றாக்குறை சீராக இருப்பதால் அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்து இருக்கிறது என கூறினார்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்க பத்திர திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அடுத்த வாரம் அவர்களின் பத்திரங்கள் முதிர்வு பெறுகின்றன. அந்த சமயத்தில் ஒரு கிராமின் விலை 3119 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அதைவிட இரண்டு மடங்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. எனவே இதில் முதலீடு செய்தவர்கள் கணிசமான லாபத்தை தான் பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.

இருந்தாலும் நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை தங்க பத்திரங்கள் வெளியீடு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் அரசு தங்க பத்திர திட்டத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருந்தது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+