இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ்ஜெட் என்பதும் இந்நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் விமான சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் 80 விமானிகளை திடீரென மூன்று மாத விடுமுறைக்கு அனுப்பி உள்ளது.
இந்த மூன்று மாதத்திற்கு 80 விமானிகளுக்கு வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை என்று கூறியிருப்பது விமானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
குறைந்த கட்டணத்தில் விமான சேவை செய்து வரும் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் சுமார் 80 விமானிகளை ஊதியம் இல்லாமல் விடுப்பில் அனுப்புவதாக நேற்று அறிவித்துள்ளது. பிராந்திய வழித்தடங்களில் இயங்கும் போயிங் 737 விமானங்களை இயக்கும் சுமார் 40 விமானிகளும், Q400 வகையை சேர்ந்த விமானங்களை இயக்கும் சுமார் 40 விமானிகளும் மூன்று மாதங்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மீண்டும் அழைக்கப்படுவார்களா?
மூன்று மாதங்கள் சம்பளமில்லா விடுமுறை என்றாலும் வீட்டுக்கு அனுப்பப்படும் விமானிகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் அழைக்கப்படுவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதால், இந்த விமானிகள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விமானங்கள்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் டிசம்பரில் ஏழு புதிய போயிங் 737 மேக்ஸை வாங்க திட்டமிட்டுள்ளது. எனவே அந்த சமயத்தில் கூடுதல் விமானிகள் தேவைப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 ஆக குறைந்த விமானங்கள்
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் சுமார் 95 விமானங்கள் இருந்தன. ஆனால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வாடகைக்கு எடுத்த விமானங்களை திருப்பியனுப்பியதால் தற்போது குறைவாகவே விமானங்கள் உள்ளன. மேலும் சில விமானங்கள் உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினையால் செயலிழந்துவிட்டதாகவும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் தற்போது 50 விமானங்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
செலவை குறைக்க திட்டம்
95 விமானங்கள் இருந்தபோது அதிக விமானிகள் தேவைப்பட்டதாகவும், தற்போது 50 விமானங்கள் மட்டுமே இருப்பதால் அதிக விமானிகளை வைத்திருப்பது அர்த்தமற்றது என்றும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செலவை குறைக்கவே இந்த நடவடிக்கை என்றும், ஆனால் புதிய விமானம் வாங்கும்போது விமானிகள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்றும் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications