கொரோனா வைரஸ் இணையான பாதிப்பு.. இந்திய பங்குச்சந்தையை புரட்டிப்போட்ட தேர்தல் முடிவுகள்..!!

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி 8.5 சதவீதம் வரை சரிந்து 4 வருடத்தில் மோசமான சரிவை எதிர்கொண்டது. 2020 மார்ச் மாதம் உலகமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய சரிவை இன்று இந்திய பங்குச்சந்தை சந்தித்தது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், பாஜக கட்சி எதிர்பார்க்கப்பட்ட அளவு இடங்களை வெல்லவில்லை என்பது இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே முதலீட்டாளர்கள் உணர்ந்த நிலையில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்தனர்.

கொரோனா வைரஸ் இணையான பாதிப்பு.. இந்திய பங்குச்சந்தையை புரட்டிப்போட்ட தேர்தல் முடிவுகள்..!!

இதன் எதிரொலியாக பெஞ்ச்மார்க் பிஎஸ்இ சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 4,300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, நான்கு ஆண்டுகளில் அதன் மோசமான வர்த்தக நாளை நிறைவு செய்துள்ளது. இந்த சரிவின் மூலம் 2024ஆம் ஆண்டு இந்தியா எதிர்கொண்ட மொத்த வளர்ச்சியைத் துடைத்து எடுத்துள்ளது.

30-பங்கு கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 4,390 புள்ளிகள் அல்லது 5.74% குறைந்து 72,079 இல் முடிவடைந்தது. இதேபோல் NSE நிஃப்டி குறியீடு 1,379 புள்ளிகள் அல்லது 5.93% சரிந்து 21,884 இல் முடிந்தது.

இதற்கிடையில், பிஎஸ்இயில் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.29.9 லட்சம் கோடி குறைந்து ரூ.396 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீடு இன்று ஒரு நாளில் அதிகபட்சமாக 6,234 புள்ளிகள் வரை சரிந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது. மும்பை பங்குச்சந்தையில் 3,400-க்கும் மேற்பட்ட பங்குகள் விலை குறைந்தன. அவற்றில் 745 பங்குகள் லோவர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டுள்ளன. மேலும் 285 பங்குகள் 52 வார சரிவைப் பதிவு செய்துள்ளது.

ஒரு நாள் வர்த்தகத்தில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மதிப்பும் அதிகப்படியாக ரூ.45.56 லட்சம் கோடி குறைந்து ரூ.380.35 லட்சம் கோடியாகச் சரிந்தது, ஆனால் வர்த்தக முடிவில் ரூ.29.9 லட்சம் கோடி குறைந்து ரூ.396 லட்சம் கோடியாக நிலைப்பெற்றது.

தேர்தல் முடிவுகளின் திடீர் திருப்பம்: முதலீட்டாளர்கள் பாஜக கட்சி அதிக இடங்களை வெல்லும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வேறுவிதமாக இருந்ததால், பங்குச்சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

லாபத்தை எடுக்கும் போக்கு: 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட லாபத்தை எடுத்துக்கொள்ள முடிவு செய்த முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததும் சரிவுக்கு ஒரு காரணம்.

சர்வதேசச் சந்தைகளின் நிலவரம்: அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்பட்டதால், இந்தியப் பங்குச்சந்தை இன்று கூடுதலாகப் பாதிக்கப்பட்டது.

எதிர்கால பாதிப்பு: இந்த சரிவு குறுகிய காலத்திற்கானதா அல்லது நீண்ட காலத்திற்கானதா என்பதை இப்போது கணிப்பது கடினம். தேர்தல் முடிவுகள் உறுதி செய்யப்பட்டு, புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகு, சந்தை நிலவரம் நிலைபெறும். இதனால் முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் பங்குகளை வைத்திருப்பது நல்லது.

இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு கவலைக்குரியது என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இந்தியப் பங்குச்சந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்பில்லை. முதலீட்டாளர்கள் நிதானமாக இருந்து, சந்தை நிலவரத்தைக் கவனித்து முதலீடு செய்வது சிறந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+