4 மாதத்தில் ரூ. 200 கோடியை இழந்த பெங்களூரு மக்கள்.. தலைவிரித்தாடும் முதலீட்டு மோசடிகள்..!

பெங்களூரு: கடந்த நான்கு மாதங்களில் பெங்களூருவில் மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக மக்கள் சுமார் ரூ. 197 கோடி ரூபாயை இழந்துள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை கூறுகிறது. அதன் விரிவான விவரங்களை விவரிக்கிறது இந்தப் பதிவு.

இந்தியாவில் மோசடி தொடர்பான சைபர் கிரைம் வழக்குகள் 735 பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 10 % வழக்குகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்ற நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. பங்குச் சந்தை மோசடிகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்குகளை விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளனர். பிப்ரவரியில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 8 மோசடி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 237 வழக்குகளில் ரூ. 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

4 மாதத்தில் ரூ. 200 கோடியை இழந்த பெங்களூரு மக்கள்.. தலைவிரித்தாடும் முதலீட்டு மோசடிகள்..!

சில ஆண்டுகளாக மக்கள், அதிக வருமானம் பெற வேண்டும் என்று பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற முதலீட்டு திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்கின்றனர். இதன் விளைவாக தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் பேசி, தான் ஏமாறுகிறோம் என்று கூட தெரியாமல் போலியான செயலிகளின் மூலம் லட்சக்கணக்கான தொகையை இழந்து வருகின்றனர். வருமானம் பெற வேண்டும் என்று எண்ணுவதற்கு முன்பு நாம் செய்ய இருக்கும் முதலீட்டு திட்டம் உண்மைதானா.. என்று பலமுறை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதன் பிறகு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மோசடிகள் குறித்து போலீசார் தொடர்ந்து எச்சரிக்கையை விடுத்தாலும், ஏமாறும் மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் தாங்கள் புகழ்பெற்ற நிதி நிறுவனங்கள் என்று பொய்யாக கூறி போலிச் சான்றிதழ்களை காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்ற முயற்சித்த நிறுவனங்களுக்கு எதிராக தேசிய பங்கு சந்தை (NSE) முதலீட்டாளர்களை எச்சரித்தது. இருந்தும், அது தெரியாத சிலர் தொடர்ந்து போலியான முதலீட்டு நிறுவனங்களின் மூலம் ஏமாந்து வருகின்றனர்.

இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோர் 30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பங்குச்சந்தையை பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று காவல்துறை இணை ஆணையர் சந்திரகுப்தா அறிக்கையில் தெரிவித்துள்ளார். பேராசையால் மக்கள் பணத்தை இழக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள இளம் முதலீட்டாளர்களும், இதுபோன்ற போலியான முதலீட்டு திட்டங்களுக்கு மயங்கி அதிக அளவில் பணத்தை இழக்கின்றனர். தெரியாத நபர்கள் இதுபோல ஏமாந்தால் அவர்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம். ஆனால் நன்கு படித்த நபர்களே, இது போன்ற மோசடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கான தொகையை இழப்பது வேதனை அளிக்கிறது. ரூ.200 கோடி ரூபாய் இழப்பு என்பது அவ்வளவு சிறிய தொகை அல்ல. அந்த அளவு மக்களின் அறியாமையை காட்டுகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+