அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பணவீக்கம் குறைந்ததை தொடர்ந்து நாணய கொள்கையை கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டு, 2024 ஆம் ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் குறியீடுகள் நேற்றைய வர்த்தகத்தில் 1.4 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டு சந்தையான பத்திர சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீட்டை வெளியேற்றி ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர். இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்தில் அதிகப்படியான முதலீட்டை ஈர்த்தது.

புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கிய 15 நிமிடத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 1 சதவீதம் உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது. மேலும் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் உயர்ந்து 70,540.00 புள்ளிகளை தொட்டு உள்ளது.
அமெரிக்க முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களுடைய பணத்தை ஐடி சேவை துறையில் முதலீடு செய்துள்ளனர். இதில் முக்கியமாக சிறிய ஐடி நிறுவனங்கள், 2000 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் ஐடி நிறுவன பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதில் முக்கியமாக Mphsis 6.33 சதவீதமும், கோபோர்ஜ் 4.64 சதவீதமும், பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் 4.31 சதவீதமும், டெக் மஹிந்திரா 3.44 சதவீதமும், ஹெச்சிஎல் டெக் 3.40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதை தொடர்ந்து விப்ரோ 2.44 சதவீதமும், இன்போசிஸ் 2.37 சதவீதமும், டிசிஎஸ் 1.68 சதவீமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிஃப்டி ஐடி குறியீடு பிற துறைகளை காட்டிலும் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, காலை வர்த்தகத்தில் 2.61 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஐடி துறையை தொடர்ந்து நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 2 சதவீதமும், நிதியியல் சேவை துறை 1.71 சதவீதமும், வங்கி துறை நிஃப்டி குறியீடு 1.70 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறை குறியீடுகள் மட்டுமே சரிவில் உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 929.60 புள்ளிகள் உயர்ந்து 70,514.20 புள்ளிகளை எட்டியுள்ளது, சென்செக்ஸ் அதிகப்படியாக 70,602.89 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 256.35 புள்ளிகள் உயர்ந்து 21,182.70 புள்ளிகளை எட்டியிருக்கும் வேளையில் அதிகப்பசியாக 21,210.90 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications