4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு.. அமெரிக்கா ஆதிக்கத்தை காட்டியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்து ஈசியாக லாபத்தைப் பார்க்கும் காலம் முடிந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை, சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரு முதலீட்டாளர்கள் வரை தற்போது புதிய முதலீட்டுத் திட்டத்தையும், மாற்று வழிகளையும் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இது தற்காலிகமாக மாற்றம் என்று நினைக்கும் அனைவருக்கும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் ஒரு எச்சரிக்கையாக உள்ளது.

 பட்ஜெட் 2022: நிர்மலா சீதாராமன்-க்கு வந்த புதிய பிரச்சனை..! பட்ஜெட் 2022: நிர்மலா சீதாராமன்-க்கு வந்த புதிய பிரச்சனை..!

அமெரிக்கப் பணவீக்கம்

அமெரிக்கப் பணவீக்கம்

அமெரிக்காவின் பணவீக்கம் தற்போது 1980ஆம் ஆண்டுக்குப் பின்பு 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் மார்ச் மாதத்தில் கட்டாயம் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் பணவீக்க இலக்கான 2 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இதைக் குறைக்கப் பிப்ரவரி மாதம் வெறும் 30 பில்லியன் டாலருக்கு பத்திர கொள்முதலும், மார்ச் மாதத்தில் இருந்து பத்திர கொள்முதலை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. இவ்விரு அறிவிப்புகள் வியாழக்கிழமை வர்த்தகச் சந்சையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகம்

வியாழக்கிழமை வர்த்தகம்

வியாழக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பீட்டை இழந்துள்ளனர். அமெரிக்கப் பெடர்ல் வங்கி முடிவால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் முதலீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.

5 முறை வட்டி உயர்வு

5 முறை வட்டி உயர்வு

மேலும் பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் ஏற்கனவே 3 முதல் 5 முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என அறிவித்தார், இதைக் கடைப்பிடித்தால் அடுத்த சில காலாண்டுகளுக்கு முதலீட்டு சந்தை கட்டாயம் மந்த நிலையிலும், சரிவிலும் தான் இருக்கும். இதன் மூலம் மீண்டும் முதலீட்டுச் சந்தையில் தனது ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.

முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது

முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது

முதலீட்டாளர்கள் தற்போது இரண்டு முக்கியமான விஷயத்தைச் செய்ய வேண்டும். முதலில் தினசரி வர்த்தகச் சரிவையும் மாற்றங்களையும் ஆய்வு செய்து முதலீட்டு முறையை மாற்ற வேண்டும், இரண்டாவதாக அடுத்த 6 - 12 மாதத்தில் முதலீட்டு சந்தைக்கு என்னென்ன ஆபத்துக்கள், பாதிப்புகள் வரும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பட்ஜெட்-க்கு முன் ஏற்பட்டு உள்ள இந்த மாற்றம் பெரும் பாதிப்பை உருவாக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stock market investors lose Rs 4 lakh crore after US Fed Announcement

Stock market investors lose Rs 4 lakh crore after US Fed Announcement 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.. அமெரிக்கா ஆதிக்கத்தைக் காட்டியது..!
Story first published: Thursday, January 27, 2022, 15:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X