பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பரில் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமான சூரத் டைமண்ட் போர்ஸை திறந்து வைக்க உள்ளார்.
பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை வாங்கி குவிக்கும் நம்மவர்களின் பார்வை இப்போது வைரத்தின் மீதும் விழுந்துள்ளது. தற்போது வைர நகைகள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நம் நாட்டில் வைர தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம் குஜராத்தின் சூரத் நகரம். சூரத் வைரத்துக்கு பெயர் பெற்றது என்றாலும் அங்கு இதுவரை வைரத்துக்கான பெரிய வர்த்தக மையம் கிடையாது. ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமான பாரத் டைமண்ட் போர்ஸ் உள்ளது. இந்த வளாகத்தில் 2 லட்சம் சதுர அடியில் மொத்தம் 2,500 அலுவலகங்கள் உள்ளன. நாட்டின் முன்னணி வைர வர்த்தகர்கள் இந்த வர்த்தக மையத்தில் அலுவலகங்களை கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நாட்டின் முன்னணி வைர மையமாக மும்பைக்கு பதிலாக சூரத்தை மாற்றும் நோக்கில், உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக சூரத் டைமண்ட் போர்ஸ் என்ற பிரமாண்டமான வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் எந்த ஆதரவும் இல்லாமல் சுமார் ரூ.3,400 கோடி செலவில் இந்த வைர வர்த்தக மையம் அமைக்கப்பட்டுள்ளது. 67 லட்சம் சதுர அடியில் 9 டவர்கள் கொண்ட 15 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகனை காட்டிலும் இந்த வைர வர்த்தக மையம் பெரிது என்று கூறப்படுகிறது. இந்த வணிக வளாகத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. எதிர்வரும் டிசம்பரில், உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டைமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இதனால் மும்பையில் பாரத் டைமண்ட் போர்ஸ் வர்த்தக மையத்தில் உள்ள அலுவலகத்தை விரைவில் திறக்கப்பட உள்ள சூரத் வைர வர்த்தக மையத்துக்கு மாற்ற பல முன்னணி வைர வர்த்தகர்கள் திட்டமிட்டுள்ளனர். சூரத் வர்த்தக மையத்துக்கு மாறுவதற்காக மும்பையின் பாரத் டைமண்ட் போர்ஸ் வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் சுமார் ஆயிரம் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மும்பைக்கு வரி வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று வர்த்தக ஒருவர் தெரிவித்தார். சூரத் டைமண்ட் போர்ஸ் வர்த்தக மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் பாய் நவடியா கூறுகையில், மும்பையில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால், தங்கள் தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரிக்க மும்பையில் தங்கள் அலுவலகங்களை வர்த்தகர்கள் திறக்க வேண்டியிருந்தது. தற்போது சூரத் டைமண்ட் போர்ஸ் வர்த்தக மையத்தால், நாடு முழுவதும் உள்ள வைர வியாபாரிகள் ஒரே கூரையின் கீழ் வந்துள்ளனர். சூரத்தில் இருந்து சர்வதேச விமானங்களை தொடங்க மத்திய அரசு க்ரீன் சிக்னல் கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக மும்பையில் தனது ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை நடத்தி வந்த நாட்டின் முன்னணி வைர வியாபாரியான வல்லபாய் லக்கானி ஏற்கனவே சூரத்துக்கு மாற்றியுள்ளதாக தகவல். சூரத்தில் கிட்டத்தட்ட 2,500 பணியாளர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு 1,200 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வீட்டு வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications