கடந்த குருவை பருவத்தில் தனியார் விதை விற்பனை நிறுவனங்களிடமிருந்து விதைகளை வாங்கி பயிரிட்டதால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தரமான விதைகளை உறுதி செய்வதற்காக விதை உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது விவசாயிகள் 75 சதவீதம் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், 20% வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையிடம் இருந்தும் மீதமுள்ள 5 சதவீதம் சொந்தமாக உற்பத்தி செய்வதாகவும் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளரான N. வீரசேகரன் கூறுகையில் வேளாண் துறை தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விதை விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் விவசாய கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு சொந்தமான பயன்படாத நிலங்களையும் விதை உற்பத்திக்கு ஏற்றதாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு ஒன்றியத்திலும் கூடுதல் விதை உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் விதை மேலாண்மைக்கு மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்கவும், மாவட்ட அதிகாரிகள், வேளாண் நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த விவசாயிகளைக் கொண்ட குழுவை உருவாக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விதை உற்பத்தி தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடம் இருந்து விதைகளைப் பெற்று வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 35 முதல் 40 சதவீத விதைத் தேவையை பூர்த்தி செய்து வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கிராம குழுக்கள் மூலம் 10 முதல் 15 சதவீத விதைத் தேவையை பூர்த்தி செய்கின்றன, மீதமுள்ளவை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த குறுவை பருவத்தில் லால்குடி வட்டாரத்தில் மட்டும் 46 டன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு சப்ளை செய்துள்ளோம். வேளாண்மைத் துறையின் மூலம் பூச்சிகளை எதிர்க்கும் வகையிலான விதைகள் வழங்கப்பட்டாலும், சான்று பெறாத தனியார் ஏஜென்சிகள் மூலம் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இதுவே முதன்மைக் காரணம். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு வெளிச்சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து, நல்ல ரகங்களையே விரும்புகின்றனர். இதனால் தான் விதை பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சுகுமார் என்ற அதிகாரி கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications