தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. தமிழக கோயில்கள் வேண்டுதல்களை முன் வைக்கும் பக்தர்கள் அதற்கு காணிக்கையாக தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வழங்குகின்றனர்.
இவ்வாறு கோயில்களில் வழங்கப்படும் தங்கப்பொருட்களை அரசு என்ன செய்கிறது என்பதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கோயில்களில் பயன்படுத்தாமல் இருந்த தங்க பொருட்களை உருக்கி 24 கேரட் தங்க கட்டிகளாக மாற்றி வங்ககளில் டெபாசிட் செய்து 17.81 கோடி ரூபாயை வட்டி வருமானமாக ஈட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தின் போது கோயில்களில் பயன்படுத்தப்படாத தங்க பொருட்கள் குறித்து அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார். தமிழகத்தில் கோயில்களுக்கு பக்தர்கள் வழங்கும் தங்கப்பொருட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை அரசு தங்க கட்டிகளாக மாற்றி விடுகிறது என கூறினார்.
கோயில்களில் இருந்து பெறப்படும் தங்கப் பொருட்கள் மும்பையில் உள்ள அரசு நாணய கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அவை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்படுகின்றன என தெரிவித்தார். இப்படி கட்டிகளாக மாற்றப்பட்ட தங்கமானது வங்கிகளில் தங்க முதலீடு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் அரசு அண்மை கோயில்களில் பயன்படுத்தப்படாத தங்க பொருட்களை தங்கக் கட்டிகளாக மாற்றி எஸ்பிஐ வங்கியில் தங்க முதலீடு திட்டத்தின் கீழ் முதலீடு செய்திருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த தங்கக் கட்டிகளை முதலீடு செய்வதன் மூலம் மட்டும் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 17.81 கோடி ரூபாய் வட்டி வருமானமாக கிடைக்கிறது என தெரிவித்தார். இவ்வாறு கிடைக்கும் வட்டி வருமானமானது சம்பந்தப்பட்ட கோயில்களின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார்.
இந்த திட்டம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதே போல கோயில்களில் பயன்படுத்தப்படாத மற்றும் பயன்படுத்த இயலாத வெள்ளிப் பொருட்களையும் கட்டிகளாக உருக்குவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் இருந்து 424.26 கிலோ தங்கம் எடுக்கப்பட்டு உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 21 கோயில்களில் இருந்து 1000 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான தங்க பொருட்கள் இவ்வாறு பெறப்பட்டு உருக்கப்பட்டதாக அமைச்சர் சேகர பாபு தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications