கங்கைகொண்டான்: பெண்கள் சௌகரியமான முறையில் தொழில்பூங்காக்களில் பணி புரிவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வசதி நிறுவனம், கங்கைகொண்டான் தொழில் பூங்காவில் பெண் பணியாளர்களுக்கு என 500 படுக்கைகள் கொண்ட விடுதியை அமைக்க இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா பவர் நிறுவனம் சார்பாக சோலார் செல்கள் உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது. இங்கே பெரும்பாலும் பெண்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்திற்கான பிரம்மாண்ட விடுதியை கட்டிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் சௌகரியமான முறையில் தங்கி வேலை செய்யும் பொருட்டு தமிழ்நாடு தொழில்துறை வீட்டு வசதி நிறுவனம் 500 படுக்கைகளை கொண்ட தங்குமிடத்தை கட்டமைக்க இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வசதி நிறுவனம் மற்றும் டாடா பவர் சோலார் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி இந்த பெண்கள் தங்கும் விடுதியில் உயர்தரமான வசதிகள் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமையலறை, உணவு உண்ணும் வரை, அரங்கங்கள் ,விளையாட்டு இடங்கள் மருத்துவ அறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படும் என தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வசதி நிறுவனம் கூறியுள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் தொழில்துறை சார்பாக வீட்டு வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மொத்தம் 40 கோடி ரூபாய் செலவில் தொழில் பூங்காவில் வேலை செய்யும் பெண்கள் தங்கும் வகையிலான அனைத்து வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 145 அறைகள் 870 படுக்கைகள் கொண்டு தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான இடங்கள் டாடாவில் பணிபுரியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு தொழில்துறை வீட்டு வசதி நிறுவனம் சிப்காட் தொழில் பூங்காக்களுக்குள்ளேயே பெண்களுக்கான தங்கும் விடுதிகளை ஏற்படுத்தி வருகிறது. சிறு சேரியில் 807 படுகைகள் கொண்ட தங்கும் விடுதி , கங்கைகொண்டானில் 870 படுகைகள் கொண்ட தங்கும் விடுதி, சூளகிரியில் 1495 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி, இருங்காட்டுக்கோட்டை பகுதியில் 801 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி, செய்யாறு பகுதியில் 441 படுகைகள் கொண்ட தங்கும் விடுதிகளை அமைத்து வருகிறது.
மொத்தமாக 204 கோடி ரூபாய் செலவில் 4,414 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்கும் விடுதிகள் சிப்காட் தொழில் பூங்காக்களுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
வெளியூர்களிலிருந்து பெண்கள் சௌகரியமாக வந்து இங்கே தங்கி பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. கங்கைகொண்டான் பூங்காவில் 315 ஏக்கர் பரப்பளவில் சோலார் செல் உற்பத்தி ஆலையை டாடா நிறுவியுள்ளது. இதில் 80 சதவீதம் பேர் பெண்களே ஊழியர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications