டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் ராணுவத்தினருக்கான போக்குவரத்து விமானங்களை தயாரிக்கும் ஒரு மாபெரும் ஒப்பந்தத்தினை டாடா மற்றும் ஏர்பஸ் செய்துள்ளது.
இந்த மெகா ஒப்பந்தத்தின் மதிப்பானது 22,000 கோடி ரூபாயாகும் (டாலரில் 2.66 பில்லியன் டாலர்கள்).
இந்தியாவில் தனியார் நிறுவனம் மூலமாக ராணுவ விமானம் தயாரிப்பது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பயன்பாடு
இந்த திட்டத்தின் மதிப்பு 21,935 கோடி ரூபாயாகும். இந்த விமானங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதியினை குறைக்க திட்டம்
இந்த திட்டத்திற்கு மின்சாரம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும் என ஏற்கனவே குஜராத் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
டாடா - ஏர்பஸ்-ன் இந்த கூட்டணி மூலம் ராணுவ தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை இறக்குமதியினை சார்ந்திருப்பதைக் குறைக்க ,பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் சாதகமாக இருக்கும் எனலாம்.
மத்திய அரசுடன் ஒப்பந்தம்
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 போக்குவரத்து விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 16 விமானங்கள் பறக்கும் நிலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது கிடைக்கும்?
இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் ராணுவத்திற்கு விமானங்களை உற்பத்தி செய்து வழங்கப்படும் முதல் திட்டம் இதுவாகும்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி முதலாவதாக 16 விமானங்கள் பறக்க தயாராக இருக்கும் நிலையில் செப்டம்பர் 2023 மற்றும் ஆகஸ்ட் 2025க்குள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதே குஜராத்தில் தயாரிக்கப்படும் முதல் விமானம் 2026ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேதாந்தா + பாக்ஸ்கான் திட்டம்
ஏற்கனவே வேதாந்தா லிமிடெட் மற்றும் தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் செமிகண்டக்டர்கள் தயாரிக்கப்படும் திட்டத்தின் மூலம், 19.5 பில்லியன் டாலர் முதலீட்டினை குஜராத் பெற்றுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அகமதாபாத்திற்கு அருகில் மிகப்பெரிய ஆலைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்துக்கு ஜாக்பாட்
டாடா ஏர்பஸின் இந்த இணைப்பு பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் மூலம், வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நுட்பம் மற்றும் உபகரணங்களை சார்ந்திருப்பது குறைய காரணமாக அமையலாம். இந்த திட்டத்தின் மூலமும் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். மொத்தத்தில் இது குஜராத்துக்கு பொற்காலம் என்றே கூறலாம்.
விமான படையின் திறன்
புதிய C- 295 போக்குவரத்து விமானம், இந்திய விமானபடையின் வயதான அவ்ரோ விமானத்திற்கு பதிலாக இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. இது உற்பத்தி மூலம் இந்திய விமான படையின் திறனை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications