கேப்பில் கிடா வெட்டிய டாடா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

டெஸ்லா உடன் முகேஷ் அம்பானி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியான நிலையில், என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா ஒப்பந்தமே கையெழுத்திட்டு உள்ளது என தகவல் வெளியானது. எனக்கே விபூதி அடிச்சிட்டில்ல மொமெண்ட் தான் இது.

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் டெஸ்லா நிறுவனம், உலகளவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒருபடியாகப் பல வருடப் போராட்டத்திற்குப் பின்பு இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

கேப்பில் கிடா வெட்டிய டாடா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

இந்தியாவில் அமைக்கப்படும் தொழிற்சாலை ஏற்றுமதியை மையமாக வைத்து உருவாக்கப்படுவதால் டெஸ்லா தனது சப்ளை செயினை விரிவாக்கம் செய்ய வேண்டியது கட்டாயம், ஏற்கனவே இந்தியாவில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதிரிப்பாகங்களை டெஸ்லா வாங்கி வரும் வேளையில் அடுத்து முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் தற்போது கார் மட்டும் அல்லாமல் டிரக், ரோபோ, ஏஐ என பல துறையில் இயங்கி வரும் வேளையில் இதன் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் செமிகண்டக்டர் சிப் பெரும் தேவையாக இருக்கும் வேளையில், டெஸ்லா நிறுவனம் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிஸ்டர் அம்பானி, இங்கேயும் வந்துட்டீங்களா.. வியந்த எலான் மஸ்க்.. தமிழ்நாடுக்கு வருகிறதா TESLA..?!


இதன் மூலம், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியைத் தாண்டி, டெஸ்லா நிறுவனம் பல துறையில் முதலீடு செய்து தனது ஆப்ரேஷன்ஸ்-ஐ விரிவாக்கம் செய்யும், ஆப்பிள்-க்கு எப்படி இந்தியா முதுகெலும்பாகச் செயல்படுகிறதோ, அதேபோல் தற்போது டெஸ்லாவுக்கு பக்கபலமாக இருக்கப் போகிறது என தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா - டாடா எலக்ட்ரானிக்ஸ் ரகசியமாகக் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவில் தங்கள் செமிகண்டக்டர் துறையில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும். மேலும் உலகளவில் முன்னணி வாடிக்கையாளர்களுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் ஒரு நம்பகமான சப்ளையர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மின்சார வாகன உற்பத்தியில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இந்தியாவில் நுழைய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்த மாதம் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி-யை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலைகளுக்கான நிதி ஒதுக்கீடு உட்பட, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான திட்டங்களை மஸ்க் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் இந்திய பயணத்தில் ஸ்டார்லிங்க் சேவைக்காக முகேஷ் அம்பானி உடனான பேச்சுவார்த்தை, செமிகண்டக்டர் சிப் உற்பத்திக்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் உடனான ஒப்பந்தம் ஆகியவை குறித்து உறுதியான தகவல் கிடைக்கும்.

டெஸ்லா நிறுவனம், சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாகும். டெஸ்லா - டாடா எலக்ட்ரானிக்ஸ் மத்தியிலான ஒப்பந்தம் இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கு பெரும் வளர்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா புதிய உயரத்தைத் தொடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+