டாடா குழுமம் இதுநாள் வரையில் கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் ஐபோனுக்கான சில முக்கிய உதிரிபாகங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில் முதல் முறையாக ஐபோன்களை அசம்பிளி செய்து சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
இந்தியாவில் ஐபோன் அசம்பிளி செய்ய இதுவரையில் டாடா எவ்விதமான தொழிற்சாலையும் அமைக்கவில்லை, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு டாடா குரூப் பெங்களூரில் இருக்கும் விஸ்திரான் ஐபோன் அசம்பிளி தொழிற்சாலையை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்போது வெற்றி அடைந்துள்ளது.

டாடா குரூப், பெங்களூரில் இருக்கும் விஸ்திரான் தொழிற்சாலையை கைப்பற்றுவதன் மூலம், ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற புதிய சரித்திரத்தை படைக்க உள்ளது டாடா குரூப். என்.சந்திரசேககரன் தலைமையிலான டாடா சன்ஸ் புதிய துறையில் இறங்குவது மட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் வேகத்தை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.
பெங்களூரில் இருக்கும் விஸ்திரான் தொழிற்சாலையில் தற்போது ஐபோன் 14 மாடல் அசம்பிளி செய்யப்பட்டு வருகிறது, இத்தொழிற்சாலையில் 10000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மார்ச் 2024க்குள் சுமார் 1.8 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய ஐபோன்களை தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அடுத்த வருடத்திற்குள் ஊழியர்கள் எண்ணிக்கையை 3 மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பெங்களூரில் விஸ்திரான் தொழிற்சாலை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்வது மூலம் விஸ்திரான் இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேறுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் ஆப்பிள் நிறுவன சப்ளையர்கள் பட்டியலில் பாக்ஸ்கான், பெகாட்ரன் உடன் டாடா குழுமம் சேர உள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே கிருஷ்ணகிரியில் ஐபோனுக்கான உதிரிபாகங்களை தயாரித்து வரும் வேளையில் தற்போது ஐபோன் அசம்பிளி பணிகளில் இறங்க உள்ளது. இதன் மூலம் ஆப்பிள் உடனான கூட்டணியை டாடா பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது. டாடா குரூப் - விஸ்திரான் மத்தியிலான ஒப்பந்தம் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடியும் என எதர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் விஸ்திரான் தொழிற்சாலை 600 மில்லியன் டாலர் என மதிப்பிடப்படும் வேளையில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் விஸ்திரான் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான போன்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
155 வருட பழமையான டாடா குழுமம் உப்பு முதல் டெக் வரையில் பல பொருட்களையும், சேவைகளையும் அளித்து வரும் வேளையில், கடந்த சில வருடங்களாக குறிப்பாக சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, ஈகாமர்ஸ், செமிகண்டக்டர் என பல துறைகளில் புதிதாக இறங்கி வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications