இந்தியாவை மொத்தமாகத் திருப்பிப்போட்டு உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் அரசு மட்டுமல்லாமல் மக்களுக்கும், நிறுவனங்களுக்கு அதிகளவிலான உதவிகளைச் செய்துள்ளது.
குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா முதல் மற்றும் 2வது கொரோனா அலைகளிலும் தனது ஊழியர்கள், குடும்பங்கள், மக்களுக்கும் பல உதவிகளைச் செய்தது, செய்தும் வருகிறது.
2,500 கோடி ரூபாய் நிவாரண நிதி
இந்நிலையில் டாடா குழுமம் கொரோனா நிவாரணமாகச் சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளையும், நிவாரணங்களையும் அளித்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை, ஆக்சிஜன் உற்பத்தி
இதில் முக்கியமாக நாட்டின் பல பகுதிகளில் புதிய மருத்துவமனை அமைத்தல், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்த அதிகளவிலான தொகையைச் செலவு செய்துள்ளதாக என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அலைகள்
முதல் கொரோனா அலையில் தோராயமாக 1500 கோடி ரூபாய் அளவிலான நிதியையும், 2வது கொரோனா அலையில் டிசிஎஸ், டாடா ஸ்டீல் நிறுவனங்கள் வாயிலாக 1000 கோடி ரூபாய் என டாடா குழும நிறுவனங்கள் மொத்தமாகச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான நிதியைச் செலவு செய்துள்ளது என என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார் இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
டாடா ஸ்டீல் அறிவிப்பு
இதுமட்டும் அல்லாமல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளத்தை முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என டாடா ஸ்டீல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கல்வி, மருத்துவ உதவிகள்
அதாவது 30 வயதான ஒரு டாடா ஸ்டீல் ஊழியர் கொரோனா காரணமாக உயிரிழந்தால் அடுத்த 30 வருடம் அதாவது ஓய்வு பெறும் 60 வயது வரையில், ஊழியர் வாங்கிய கடைசி மாத சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஊழியரின் குடும்பத்திற்கு அளிக்க உள்ளதாக டாடா ஸ்டீல் அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மருத்துவக் காப்பீடு, குழந்தைகளுக்குப் பட்டப்படிப்பு வரையில் 100 சதவீத இலவச கல்வி ஆகியவற்றையும் அறிவித்துள்ளது.
பிற முக்கிய நிறுவனங்கள்
டாடா ஸ்டீல் அறிவிப்புக்குப் பின்பு ரிலையன்ஸ், ஜின்டால் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் 2 வருடம், 5 வருடம் எனக் கொரோனா மூலம் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவ முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications