இந்தியாவை மொத்தமாகத் திருப்பிப்போட்டு உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் அரசு மட்டுமல்லாமல் மக்களுக்கும், நிறுவனங்களுக்கு அதிகளவிலான உதவிகளைச் செய்துள்ளது.
குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா முதல் மற்றும் 2வது கொரோனா அலைகளிலும் தனது ஊழியர்கள், குடும்பங்கள், மக்களுக்கும் பல உதவிகளைச் செய்தது, செய்தும் வருகிறது.
2,500 கோடி ரூபாய் நிவாரண நிதி
இந்நிலையில் டாடா குழுமம் கொரோனா நிவாரணமாகச் சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளையும், நிவாரணங்களையும் அளித்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை, ஆக்சிஜன் உற்பத்தி
இதில் முக்கியமாக நாட்டின் பல பகுதிகளில் புதிய மருத்துவமனை அமைத்தல், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்த அதிகளவிலான தொகையைச் செலவு செய்துள்ளதாக என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அலைகள்
முதல் கொரோனா அலையில் தோராயமாக 1500 கோடி ரூபாய் அளவிலான நிதியையும், 2வது கொரோனா அலையில் டிசிஎஸ், டாடா ஸ்டீல் நிறுவனங்கள் வாயிலாக 1000 கோடி ரூபாய் என டாடா குழும நிறுவனங்கள் மொத்தமாகச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான நிதியைச் செலவு செய்துள்ளது என என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார் இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
டாடா ஸ்டீல் அறிவிப்பு
இதுமட்டும் அல்லாமல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளத்தை முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என டாடா ஸ்டீல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கல்வி, மருத்துவ உதவிகள்
அதாவது 30 வயதான ஒரு டாடா ஸ்டீல் ஊழியர் கொரோனா காரணமாக உயிரிழந்தால் அடுத்த 30 வருடம் அதாவது ஓய்வு பெறும் 60 வயது வரையில், ஊழியர் வாங்கிய கடைசி மாத சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஊழியரின் குடும்பத்திற்கு அளிக்க உள்ளதாக டாடா ஸ்டீல் அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மருத்துவக் காப்பீடு, குழந்தைகளுக்குப் பட்டப்படிப்பு வரையில் 100 சதவீத இலவச கல்வி ஆகியவற்றையும் அறிவித்துள்ளது.
பிற முக்கிய நிறுவனங்கள்
டாடா ஸ்டீல் அறிவிப்புக்குப் பின்பு ரிலையன்ஸ், ஜின்டால் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் 2 வருடம், 5 வருடம் எனக் கொரோனா மூலம் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவ முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications