திருநெல்வேலி-யில் டாடா-வின் மாபெரும் சோலார் திட்டம்.. அமெரிக்க அரசு நிதியுதவி உடன் விரைவில் ஆரம்பம்

இந்தியாவின் முன்னணி மின்சார துறை நிறுவனமான டாடா பவர், தமிழ்நாட்டில் சோலார் செல் உற்பத்தி ஆலையை அமைக்கவும், இதற்கான கட்டுமான பணிகளை விரைவில் துவங்கவும் அமெரிக்க அரசு அமைப்பிடம் இருந்து 400 மில்லியன் டாலர் நிதியுதவி பெற உள்ளது. டாடா குழுமம் அடுத்தடுத்து பல முதலீடுகளை செய்து வரும் வேளையில் இந்த சோலார் செல் உற்பத்தி ஆலை திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

யுஎஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (DFC) இயக்குநர்கள் குழு, டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான TP சோலார் லிமிடெட் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்க உள்ள கிரீன்ஃபீல்ட் 4.3 GW சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி தொழிற்சாலைக்கு சுமார் 425 மில்லியன் டாலர் வரையிலான நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

திருநெல்வேலி-யில் டாடா-வின் மாபெரும் சோலார் திட்டம்.. அமெரிக்க அரசு நிதியுதவி உடன் விரைவில் ஆரம்பம்

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திங்கள்கிழமை டாடா பவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி தொழிற்சாலை 4.3 ஜிகாவாட் திறன் கொண்டது. இதன் மூலம் சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி டாடா குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் நேருக்கு நேர் மோத உள்ளது.

அமெரிக்காவின் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்பது அமெரிக்காவின் வளர்ச்சி நிதி நிறுவனமாகும், இது முதன்மையாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவில் அமைய உள்ள சோலார் உற்பத்தி ஆலையின் முதல் மாடியூலின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. FY24 முதல் காலாண்டில் முதல் செல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறதாக என்றும் TP சோலார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய உள்ள சோலார் உற்பத்தி ஆலையின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 2000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பெரும்பாலான ஊழியர்கள் உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த பெண் ஊழியர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா பவர் நிறுவனம் தனது கிளீன் மற்றும் கிரீன் எனர்ஜி உற்பத்தியை 2030 ஆம் ஆண்டிற்குள் 38 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் கிளீன் மற்றும் கிரீன் எனர்ஜி உற்பத்தியை விரிவுபடுத்த உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

டாடா பவர் நிறுவனத்தின் ரினியூவபிள் எனர்ஜி போர்ட்ஃபோலியோ தற்போது 7.8 ஜிகாவாட் ஆக உள்ளது, திருநெல்வேலியில் செயல்படுத்தும் 4.1 ஜிகாவாட் திட்டம் மற்றும் தற்போது கட்டுமான பணியில் 3.6 ஜிகாவாட் திட்டம் உள்ளது. டாடா பவர் நிறுவனம் ஏற்கனவே பெங்களூருவில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட சோலார் செல் மற்றும் மாடியூல் உற்பத்தி ஆலையை இயக்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+