இந்தியாவில் ஈகாமர்ஸ் சந்தையின் வழியாக நாட்டின் ரீடைல் சந்தையைப் பெரிய அளவில் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டம் தீட்டி வரும் பல்வேறு நிறுவனங்கள் மத்தியில் முதன்மையாக இருப்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் தான். இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களுக்கும் போட்டியாகக் களத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளது இந்தியாவின் மாபெரும் தொழிற்துறை நிறுவனமான டாடா குழுமம்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோ மார்ட் அறிமுகத்திற்குப் பின் இந்திய ரீடைல் சந்தை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. குறிப்பாக ஜியோமார்ட் மற்றும் அமேசான் மத்தியிலான போட்டி உச்சத்தை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்த இருமுனை போட்டியில், தற்போது 3வது நிறுவனமாக டாடா களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.
சூப்பர் ஆப்
அமேசான், ஜியோவுக்குப் போட்டியாக டாடா குழுமம் பல்வேறு சேவைகளைக் கொண்ட ஒரு சூப்பர் ஆப்-ஐ அறிமுகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ள நிலையில், இந்தச் சூப்பர் ஆப் மக்களின் சேவைக்கு டிசம்பர் அல்லது 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
பல்வேறு சேவைகள்
இப்புதிய சூப்பர் ஆப்-ல் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகளும், பொருட்களும் ஓரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், இதில் டாடா குழுமத்தின் டாடா கிளிக், ஈஸ்டோர் ஸ்டார்குவிக், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை பிராண்டான க்ரோமா ஆகிய அனைத்து சேவைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட உள்ளது.
என் சந்திரசேகரன்
ஒரு செயலிக்குள், பல்வேறு சேவைகளை அளிக்கும் செயலிகளை இணைத்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதே சூப்பர் ஆப். இந்தியாவில் தற்போது டாடா குழுமத்திற்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருக்கும் நிலையில் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் டாடா குழுமம் உறுதியாக உள்ளது என டாடா குழுமத்தின் தலைமை நிர்வாகமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள்
டாடா குழுமம் இந்திய மக்களைப் பல வகையில் இணைத்தும், வர்த்தகம் செய்து வரும் நிலையில், எங்களது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தைக் கொடுப்பது மட்டும் அல்லாமல் புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தையை இணைக்கும் திட்டத்தோடு இந்தச் சூப்பர் ஆப் உருவாக்கப்பட உள்ளது என என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கன்ஸ்யூமர் இண்டர்நெட்
கடந்த சில மாதத்தில் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக ரீடைல் வர்த்தகத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. மறுமுனையில் டிசிஎஸ் போன் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் நிறுவனத்தை வைத்துக்கொண்டும் கன்ஸ்யூமர் இண்டர்நெட் சேவையில் இன்னும் இறங்காமல் உள்ளது டாடா.
டாடா அறிமுகம் செய்யப்போகும் சூப்பர் ஆப் தான் டாடா குழுமத்தின் முதல் கன்ஸ்யூமர் இண்டர்நெட் வர்த்தகத்தின் முக்கியப் படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications