டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாகவே இந்திய ஐடி துறையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது .
2025- 26 ஆம் நிதியாண்டுக்கான ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது டிசிஎஸ். அக்டோபர் 9ஆம் தேதி நிறுவனத்தின் காலாண்டு வாரிய குழு கூட்டம் நடைபெறும் என்றும் அதே நாளில் நிதி முடிவுகள் வெளியாகும் என்றும் டிசிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்திருக்கு, ஆவணத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறி இருக்கிறது. இதே நாளில் நிறுவனத்தின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நிதி முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு அதே நாளில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகை தொடர்பான அறிவிப்பும் இந்த கூட்டத்தின் முடிவில் வெளியிடப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தை பொருத்தவரை முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை ஈவுத்தொகையாக கிடைக்கும் என்ற தகவலை அக்டோபர் 9ஆம் தேதி வெளியிட உள்ளது.
ஈவுத்தொகை பெறுவதற்கான ரெக்கார்ட் தேதியாக அக்டோபர் 15ஆம் தேதி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்கு டிசிஎஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு 11 ரூபாயை இடைக்கால ஈவுத் தொகையாக வழங்கியிருந்தது. இந்த முறை எவ்வளவு வழங்கும் என்று எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 4.38% என உயர்ந்திருந்தது. டிசிஎஸ் நிறுவன சந்தை மூலதன மதிப்பு தற்போதைக்கு 11.12 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தை பொருத்தவரை செப்டம்பர் 24ஆம் தேதி ஆன இன்று ஒரு பங்கின் மதிப்பு 3 ,036 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
டிசிஎஸ் நிறுவன பங்கு இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபத்தை ஈட்டி தரவில்லை . கடந்த ஓராண்டு காலமாக இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 28% வரை சரிவடைந்து இருக்கிறது. ஐடி துறை மந்த நிலை , அமெரிக்க அதிபர் டிரம்பின் விசா கெடுபிடிகள் , வரி விகிதங்கள், டாலர் மதிப்பு , ஏஐ வருகை என பல சவால்களுக்கு மத்தியிலும் இந்த காலாண்டு முடிவு வெளியாக உள்ளது. குறிப்பாக டிசிஎஸ் 2% ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியான பின்னர் அந்நிறுவன நடவடிக்கைகல் மோசமாகி விட்டது என ஊழியர்களே புகார் கூறும் நிலையில் நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு சற்றே குறைந்துவிட்டது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications