இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : ஓராண்டில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்-க்கு நடந்தது என்ன.. ஷாக் தகவல்..!

சென்னை: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினருக்கு இடையிலான போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த 12 மாத காலத்தில் இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் குழுவினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உண்டானது. இந்த பதற்றம் ஓராண்டு ஆகியும் தனிந்த பாடில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : ஓராண்டில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்-க்கு நடந்தது என்ன.. ஷாக் தகவல்..!

இந்த பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடந்த 12 மாதங்களில் 44.8% வரை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 820 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1810.51 டாலராக இருந்தது அதுவே தற்போது 2,653 டாலர்கள் என உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடு என கருதி தங்கத்திலேயே தங்களுடைய முதலீடுகளை குவிக்கின்றனர். மேலும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களின் தங்க கையிருப்பை அதிகரித்துள்ளன.

எனவே தங்கத்திற்கான தேவை அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் இருந்து தான் தங்கத்தின் விலை மாதந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவதாக இந்த துறை சார்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளையில் ப்ரண்ட் கச்சா எண்ணெய் விலை 6% வரை சரிவடைந்துள்ளது அதாவது ப்ரண்ட் எனப்படும் சர்வதேச கச்சா எண்ணெய் பெஞ்ச் மார்க் ஒரு பேரல் 6.14 சதவீதம் வரை அதாவது 5.2 டாலர்கள் வரை குறைந்துள்ளது. ப்ரண்ட் ஃபியூச்சர்ஸ் மதிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பேரல் 90.89 டாலர்களாக இருந்தது.

தற்போது அது 79 டாலர்கள் என குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் காண தேவை குறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவும் கச்சா எண்ணெயின் விலை சரிவடைந்துள்ளது.

மேலும் போர் பதற்றம் தொடங்கி ஓராண்டு காலம் முடிவடைந்திருக்கும் நிலையில் இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் தணியவில்லை. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டு கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும்.

இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்தால் அது இந்திய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் இந்தியா பெருமளவிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கிறது. இது ஒரு குறுகிய காலத்திற்கு இந்தியாவின் இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. தங்கத்தின் விலை சற்றே குறையலாம் என்ற கணிப்பும் முன் வைக்கப்படுகிறது.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+