மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க பல வழிகளில் நிதி திரட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசே எதிர்பார்க்காத ஒரு பெரிய தொகையை டிவிடெண்டாக அரசிடம் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, குறுகிய கால பத்திரங்களில் ஒரு எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுவரை இல்லாத
இந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.2.5 முதல் 3 லட்சம் கோடி வரை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய டிவிடெண்ட் தொகையை காட்டிலும் அதிகமாகும். அந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2.1 லட்சம் கோடியை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு கொடுத்தது. 2022-23ம் நிதியாண்டில் ஈட்டிய லாபத்திற்காக 2023-24ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.87,416 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியது.

இது குறித்து கேர் எட்ஜ் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ரஜனி சின்ஹா கூறுகையில், டாலர் விற்பனையிலிருந்து கிடைக்கும் பெரிய லாபம் காரணமாக, இவ்வளவு பெரிய தொகையை டிவிடெண்டாக வழங்க முக்கிய காரணியாக இருக்கலாம். 2024-25ம் நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் டாலர் விற்பனை 37,160 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023-24ம் நிதியாண்டில் 15,300 கோடி டாலராக இருந்தது.
டாலர் விற்பனை
டாலர் விற்பனை அதிகரிப்பு மற்றும் விற்பனை விலைக்கும் கொள்முதல் விலைக்கும் இடையிலான வித்தியாசம் ஆகியவை கடந்த நிதியாண்டில் டாலர் விற்பனையிலிருந்து ரிசர்வ் வங்கி பெரிய லாபத்தை ஈட்டியிருக்கலாம். இதுதவிர, ரூபாய் மீதான வட்டி வருமானம் மற்றும் வெளிநாட்டு பத்திரங்கள் போன்ற பிற காரணிகளும் அதிக டிவிடெண்டு தொகை வழங்க காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வழங்க வாய்ப்புள்ளது, குறுகிய கால பத்திரங்களில் ஒரு எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து டிவிடெண்டாக ரூ.2.6 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிட்டு இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி மட்டுமே அதனை காட்டிலும் கூடுலாக டிவிடெண்டு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர செலவினம்
பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் அதிகமான ரிசர்வ் வங்கி மூலமான டிவிடெண்ட் வருவாய் மற்றும் சில திட்டங்ளில் சேமிப்பு ஆகியவற்றின் பலனாக, வளர்ச்சி மந்தநிலை அபாயங்களையும், ஏதேனும் அவசரகால செலவின தேவைகளையும் எதிர்கொள்ளும் வகையில் மத்தி அரசு நிதி நிலையில் வலுவாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications