இந்தியாவின் முக்கிய டெக்ஸ்டைல் நகரமாக விளங்கும் திருப்பூரில் இருக்கும் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்குத் திடீரென வெளிநாட்டு பிராண்டுகளான Primark மற்றும் வால்மார்ட் போன்றவை ஆர்டர்களைக் குவித்து வருகிறது.
3 மாதமாக வெளிநாட்டு ஆர்டர்களின் அளவு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், பல தொழிற்சாலை புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து ஆர்டர்கள் குவியத் துவங்கியுள்ளது. என்ன காரணம் தெரியுமா..?
டெக்ஸ்டைல்
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளில் இருந்து டெக்ஸ்டைல் ஆர்டர்களைப் பெற தென்னிந்திய நாடுகள் மத்தியில் அதிகப்படியான போட்டி இருக்கும் காரணத்தால் விலை போட்டியும் மிகவும் கடுமையாக இருக்கும்.
3 மாதம்
இதற்கிடையில் இந்தியாவில் டெக்ஸ்டைல் உற்பத்தி பொருட்கள் விலை தாறுமாறாக அதிகரித்த காரணத்தால் கடந்த 3 மாதமாக வெளிநாட்டில் இருந்து வரும் ஆர்டர்கள் எண்ணிக்கையும், அளவுகளும் குறைந்து வந்தது. இந்த நிலையில் 3 மாதத்திற்குப் பின் விலைவாசி குறைந்த நிலையில் திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் குவிந்துள்ளது.
வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ்
கடந்த 3 மாத காலகட்டத்தில் இந்திய தயாரிப்புகளின் விலையைக் காட்டிலும் வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தயாரிப்புகளின் விலை மிகவும் குறைவான விலையில் இருந்த காரணத்தால் போட்டி கடுமையாகியது.
பருத்தி மற்றும் நூல் விலை
இக்காலகட்டத்தில் இந்திய டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர் சந்தித்த முக்கியமான பிரச்சனை, பருத்தி மற்றும் நூல் விலை அதிகரிப்பு தான். இக்காரணத்தால் உள்நாட்டுச் சந்தையில் ஆடை தயாரிப்புகள் விலை அதிகரித்து, இதனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விலை போரை சமாளிக்க முடியாமல் வர்த்தகத்தை இழந்தது.
நூல் விலை சரிவு
தற்போது பருத்தி மற்றும் நூல் விலை குறைந்த நிலையில் வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைக் காட்டிலும் விலை குறைவாக அளிக்கப்படுவதால் புதிய வெளிநாட்டு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. இந்தியாவில் நூல் விலை 10 -15 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சரிந்த நிலையில் இது ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் லாபத்தையும், வாய்ப்புகளையும் அளித்துள்ளது. இதே காரணத்தால் வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் நிறுவனங்களும் அதிக ஆர்டர்களைப் பெற்றுள்ளது, ஆனால் பருத்தி விலை சரிவின் வாய்ப்பு கிடைக்கவில்லை.
திருப்பூர்
திருப்பூரில் 3,000 ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன, இதில் 18 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். திருப்பூர் நகரின் வருடாந்திர ஏற்றுமதி மதிப்பு மட்டும் 33,000 முதல் 35,000 கோடி ரூபாய் வரை உள்ளது. தற்போது சந்தையில் பருத்தி வரத்து அதிகரித்துள்ளதால், இந்திய பருத்தி ஸ்பாட் விலைகள் அக்டோபர் மாதத்தில் சுமார் 6.21% குறைந்துள்ளது.
பருத்தி ஒரு பேல் விலை
பருத்தி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் பருத்திக்கான டிமாண்ட் மிகவும் குறைவாகவே உள்ளது, ஆனால் தற்போது ஏற்பட்டு உள்ள விலை சரிவு மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் பருத்தி ஒரு பேல் விலை 25000 ரூபாய் வரையில் சரியவும் வாய்ப்பு உள்ளது.
திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதி
மே - ஜூன் காலாண்டில் பருத்தி விலை சுமார் 40 சதவீதம் அதிகரித்து 11 வருட உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் நிதியாண்டில் திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதி அளவு 50000 கோடி ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications