மும்பை: டாடா குழுமத்திற்கு சொந்தமான பிரபல வாட்ச் மற்றும் நகை விற்பனை நிறுவனமான டைட்டன் லிமிடெட்டின் வருமானம் கடந்த காலாண்டில் 25 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதியோடு முடிவடைந்த காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் நிகர லாபம் 705 கோடி ரூபாயாக இருக்கிறது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் 940 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிறுவனமாக இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டை விட தற்போது அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

கடந்த ஆண்டில் 10,027 கோடி ரூபாயாக இருந்த டைட்டன் லிமிடெட் நிறுவன வருமானம், நடப்பு ஆண்டில் 24 சதவீதம் அதிகரித்து 12,458 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையில் டைட்டன் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 3,135 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
டைட்டன் நிறுவனத்தை பொருத்தவரை நகை விற்பனை மூலம் இந்த நிறுவனத்திற்கு கிடைத்த வருமானம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 10,763 கோடி ரூபாய் என இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக இந்தியாவில் தங்களுடைய நகை விற்பனை அதிகரித்துள்ளது என டைட்டன் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் தங்கத்தை நகையாக வாங்கி வைப்பதில் மக்கள் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
எனவே செப்டம்பர் மாதம் இந்தியாவில் குறிப்பாக தங்களுடைய நகை விற்பனை பிரிவில் தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது என டைட்டன் நிறுவனம் கூறியுள்ளது. இந்த காலகட்டத்தில் தங்கள் நிறுவனத்தின் தங்க விற்பனை வளர்ச்சி இரண்டு இலக்கம் என உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் டாடா குழுமத்திற்கு சொந்தமான டைட்டன் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய தனிஷ்க் நகை கடைகளில் இந்தியாவின் 11 இடங்களில் புதிய கிளைகளை தொடங்கியுள்ளது.
டைட்டன் நிறுவனம் தனிஷ்க், மியா, சோயா, கேரட் லேன் ஆகிய பிராண்டுகளின் கீழ் நகை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தங்களுடைய கைக்கடிகார விற்பனை பிரிவில் அனலாக் கடிகாரங்கள் விற்பனை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு அவரது சகோதரர் நோயல் டாடா நிறுவன தலைவராக பதவியேற்றுள்ளார், இந்த நிலையில் டைட்டன் நிறுவனத்தின் லாபம் குறைந்திருப்பதாக செய்தி வந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications