இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் முன்னணி வர்த்தக பிரிவாகவும், நாட்டின் மிகப்பெரிய நகை உற்பத்தி மற்றும் லைப்ஸ்டைல் நிறுவனமாக இருக்கும் டைட்டன் கம்பெனி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனிஷ்க் இந்தியாவின் பெரு நகரங்களில் அசத்தி வரும் வேளையில், தற்போது 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இதேபோல் வெளிநாட்டிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவில் பிரபலமான நகை கடைகளான ஜோய் அலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற பல போன்றவை வளைகுடா நாடுகளில் அதிகப்படியான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற்று வரும் வேளையில், டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனமும் வளைகுடா நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய Damas என்னும் நகை கடை நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்கியுள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டைட்டன் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் FZCO மூலம், வளைகுடா நாடுகளில் பிரபலமாற விளங்கும் தமாஸ் ஜூவல்லரி நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றுவதற்கு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
டைட்டன் நிறுவனம், தமாஸ் ஜூவல்லரி நிறுவனத்தில் சுமார் 67 சதவீத பங்குகளை 1,038 மில்லியன் திராஹம்-க்கு வாங்கியுள்ளது. இந்திய ரூபாய் ம மதிப்பில் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாயாகும். இந்த ஒப்பந்தம் படி டைட்டன் ஹோல்டிங்ஸ் தமாஸ் LLC-யின் 67% பங்குகள் மற்றும் நிர்வாகத்தில் ஆதிக்கத்தை மன்னாய் கார்ப்பரேஷன் (Mannai Corporation) இலிருந்து கைப்பற்றியுள்ளது.
தமாஸ் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் நகை வணிகத்தை நடத்தி வருகிறது. இந்த பங்கு கைப்பற்றல் மூலம் டைட்டனுக்கு இப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற வழிவகுக்கும். டைட்டன் நகை பிராண்ட் தனது சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
மேலும் மன்னாய் கார்ப்பரேஷன் தற்போது வைத்திருக்கும் மீதமுள்ள 33% பங்குகளை டைட்டன் 2029-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின் வாங்க முடியும், ஆனால் இது இரு தரப்பு ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த பங்கு கைப்பற்றல் நடக்கும்.
வளைகுடா நாடுகளுக்கு டைட்டன் நுழைந்தது மூலம் ஜோய் அலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இப்பகுதியில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!



Click it and Unblock the Notifications